Showing posts with label மாமனிதர்கள். Show all posts
Showing posts with label மாமனிதர்கள். Show all posts

Thursday, December 08, 2016

புரட்சித் தலைவி ‘அம்மா’

 முக நூலில் ’பழைய’ நண்பர் சுஜாதா தேசிகன் எழுதிய இடுகை இது. கீழே உள்ள ஜெயா படம் அவர் வரைந்தது.  சுஜாதாவின் “ஸ்ரீரங்கத்து தேவதைகள்” சிறுகதைத் தொகுப்புக்கு,  அவர் வரைந்த ஸ்ரீரங்கம் ஊர் சார்ந்த படங்கள் (Pencil sketch) அத்தனை அருமையாக இருக்கும்
Follow · December 6 near Bangalore ·

புரட்சித் தலைவி ‘அம்மா’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஜெ.ஜெயலலிதா நேற்று காலமானார்.

அவரது ஓவியம் ஒன்றை 1995ல் வரைந்தேன்.
“ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு தைரியமா இருக்கா பாருடா” என்று ஓவியம் வரைய சொன்னார் என் அப்பா.

அதற்குப் பிறகு அவரைக் கவனிக்க தொடங்கியதில் அவருடைய ஒவ்வொரு மூவும் ”இரும்பு மனுஷி”யாக காட்சி அளித்தார். கூட்டணியாக இருக்கட்டும், திட்டங்களாக இருக்கட்டும் ‘அவுட் ஆஃப் பாக்ஸ்’ என்பார்கள் அது போல பல முடிவுகளை எடுத்தார்.

படித்த அறிவுஜீவிகளைக் காட்டிலும் அடித்தட்ட மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்த்து பார்த்துச் செய்தார். ரவுடிகளால் நடத்தப்படும் பல பத்திரிக்கைகள் அவருக்கு எதிரியாக எழுதியும், அட்டைப்படம் போட்டு கேவலப்படுத்தியது, அது எல்லாம் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை மாறாக மேலும் அவர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார்.

கடவுள் இல்லை என்று பேசிக்கொண்டு அதையே பெரிய கொள்கையாக கடைப்பித்துக்கொண்டு இருப்பவர்களிடம் “நான் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவேன்” என்று அவர்களுக்குப் பதிலடி கொடுத்தார். ஒரு பெண் என்றும் பாராமல் அவரை harass செய்து ’இரட்டை அர்த்த ஜோக்’ அடித்து எங்கே தட்டினால் வலிக்கும் என்று தெரிந்து கொண்டு அவமானப்படுத்தியவர்களை ‘மைனாரிட்டி அரசு’ என்று ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்து சாய்த்தார். சட்டசபையில் அவருடைய துணிச்சலான பேச்சை இனிமேல் கேட்க முடியாது.

அரசியலை விட்டுத் தள்ளுங்கள், அவர் ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் வாலைச் சுருட்டிக்கொண்டு இருப்பார்கள் என்பது பரவாலான நம்பிக்கை. தமிழ்நாட்டுக்கு ’அமைதிப்பூங்கா’ என்ற பெயரை பெற்றுக்கொடுத்தார்.

தமிழ்நாட்டுக்கு வேறு என்ன நல்லது செய்துவிட்டார் என்று கேட்கலாம், நாத்திகர்களிடமிருந்து நம்மை காப்பாற்றினாரே அது போதாதா ?

அவருடைய படத்தை ஓவியமாக வரைந்ததற்கு பெருமைப் படுகிறேன்.

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே !

Tuesday, August 16, 2016

தீபா கர்மாகர் - இந்தியாவின் தீபம்


தனது முதல் ஒலிம்பிக்ஸில் தீபா ”ப்ரோடுனோவா” (Vault-ல் கை ஊன்றி உயர் எழும்பிஅந்தரத்தில் இரண்டரை குட்டிக்கரணங்கள் அடித்து பின் தரையிறங்கி நிலையாக நிற்க வேண்டும். இதை Vault of Death என அழைப்பார்கள்!) எனும் கடினமான, ஆபத்தான Routine-ஐ முயன்றபோது, பார்த்த எனக்கு அச்சமாக இருந்தது. ஒரிரண்டு முறை, அபாயகரமானவற்றை முயன்ற ஜிம்னாஸ்டுகளுக்கு கழுத்து/முதுகு எலும்புகளில் அடிபட்டு, உடல் முழுதும் செயலிழந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒலிம்பிக்ஸ் என்பது உலக அளவிலான அரங்கு என்ற டென்ஷனோ, பயமோ தீபாவின் உடல்மொழியில் சற்றும் தெரியவில்லை.   பளபளத்த அக்கண்களில் அசாதாரண தன்னம்பிக்கை தெரிந்தது. 



”ப்ரோடுனோவா”வை தீபா அற்புதமாகச் செயல்படுத்தினாலும், அந்தக் கடைசிக் கணத்தில், தரை இறங்கி எழுவதற்கு முன் தரையில் அமர்ந்து எழுந்த காரணத்தால், சில தசமப் புள்ளிகளை இழந்தார். இல்லையென்றால், தனது முதல் ஒலிம்பிக்ஸிலேயே வெண்கலமாவது வென்றிருப்பார், இந்தியாவின் தங்கமகள்.  ஆசியாவின் முதல் தர ஜிம்னாஸ்ட் எனப் பெயர் பெற்றிருக்கும் சீனாவின் வாங் யான்-ஐ விட அதிகப் புள்ளிகள் பெற்று, தனது முதல் ஒலிம்பிக்ஸிலேயே ஒரு கலக்கு கலக்கி பலருக்கு ஆட்டம் காட்டி விட்டார், இவர்!

ஆனால், பி.டி.உஷாவின் 4-வது இடம் ஏற்படுத்திய வேதனையை இது ஏற்படுத்தவில்லை! அடுத்த ஒலிம்பிக்ஸில் இப்பெண் தங்கம்/வெள்ளி வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகவே தெரிகிறது. சுதந்திர இந்தியாவில், அதாவது 69 ஆண்டுகளில், ஒலிம்பிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் பெண் தீபா கர்மாகர்!  அரசு பெரிய அளவில் தீபாவுக்கு உதவி செய்ததாகத் தெரியவில்லை. இன்னொரு விஷயம், ரியோ 2016 ஒலிம்பிக்ஸ்க்காக தீபா 3 மாதங்கள் மட்டுமே தீவிரப் பயிற்சி மேற்கொண்டார். அதையும் மனதில் கொண்டால், MA Political science படித்துக் கொண்டிருக்கும், மிகச் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த இப்பெண்ணின் இச்சாதனை மகத்தானது. 

ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிக்கான வசதிகளோ, பயற்சியாளர்களோ இந்தியாவில் பெரிய அளவில் இல்லை. இதை தீபாவின் பயிற்சியாளர், பினேஷ்வர் நந்தியை மட்டம் தட்டுவதற்குச் சொல்லவில்லை. அடுத்த ஒலிம்பிக்ஸில், வால்ட் (vault) தவிர்த்து, பீம் (Beam), தரைப்பயிற்சி ஆகியவற்றில் தீபா இன்னும் சிறப்பு கூட்டவேண்டுமெனில், அவருக்கு அயல்நாட்டுப் பயிற்சியாளரும், அயல்நாட்டளவு வசதிகளும் மிக அவசியம். இதன் மூலம் இன்னும் பல தீபாக்களை உருவாக்கலாம் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.  தங்கம் வென்ற சைமோன் பைல்ஸ் தீபா குறித்துச் சொன்னதோடு, இடுகையை நிறைவு செய்கிறேன்!

"She is special. I wouldn’t have tried to do that (the Produnova). It’s insane" ”The girl has talent. I have known her for quite some time and she is special. She does the Produnova superbly.”

---எ.அ.பாலா

Friday, November 28, 2014

Phillip Hughes - அசாதாரணத் திறமை -- அஞ்சலி


Phillip Hughes - அசாதாரணத் திறமை -- அஞ்சலி

ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் பலப்பல ஆண்டுகள் தொடக்க ஆட்டக்காரராக பரிமளித்திருக்க வேண்டிய பிலிப் அகாலமாக, ஒரு அசாதாரணமான நிகழ்வில் மரணம் அடைந்தது மிகவும் வருந்தத்தக்கது. ஒரு விவசாயின் மகனாகப் பிறந்து, தனது குடும்பத்தின் வாழைத்தோட்டத்தில் கிரிக்கெட் ஆடத் தொடங்கி, தனது அசாத்தியத் திறமையினால், 20 வயதிலேயே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கியவர், ஸ்டெயின், மார்க்கல், சோத்சோபே, நிதினி ஆகியோர் அடங்கிய தென்னாப்பிரிக்காவின் சூப்பர் வேகப் பந்துவீச்சை திறம்பட ஆடி, தனது முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 75 ஓட்டங்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவின் மகத்தான வெற்றிக்கு வழி வகுத்தவர்.

2வது டெஸ்ட்டில், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான டர்பன் ஆடுகளத்தில், 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்து, உலக சாதனை நிகழ்த்தியவர். இதன் மூலம் ஜார்ஜ் ஹெட்லியின் 79 ஆண்டு சாதனை வீழ்ந்தது. சற்று நிதானமாக ஆடுபவர் என்ற முத்திரையை உடைத்து, வெலிங்டன் டெஸ்ட் ஒன்றில், 75 பந்துகளில் 86 ரன்களை விளாசி, ஒரு முக்கியமான வெற்றிக்கு காரணமானவர். அதற்கு நேர் மாறாக, 2011 கொழும்பில், இலங்கைக்கு எதிராக மட்டை போட்டு, சதமடித்து, டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வெல்ல வித்திட்டவர். ஒரு நாள் போட்டிகளிலும் 2 சதங்கள் அடித்துள்ளார். கிராமப்புறத்துக்கு உரித்தான தன்னடக்கமும், அமைதியும், தன்னம்பிக்கையும் மிக்க இளைஞரும் கூட.

இன்னும் எவ்வளவோ சாதித்திருக்க வேண்டிய, "Never say die" என்ற ஆஸ்திரேலிய சித்தாந்தத்திற்கு எடுத்துக்காட்டாக கிரிக்கெட் ஆடிய, ஒரு இளைஞர் 26 வயது நிரம்புவதற்குள் மரித்து விட்டார். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.

-- எ.அ.பாலா

Saturday, November 08, 2014

விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் செஸ் உலகநாயகன் ஆவாரா?

விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் செஸ் உலகநாயகன் ஆவாரா? -எ.அ.பாலா



செஸ் ஆனந்த் குறித்து நான் முன்னர் எழுதிய இடுகைகள்:

http://idlyvadai.blogspot.in/2012/06/blog-post.html
http://idlyvadai.blogspot.in/2013/11/blog-post_17.html
http://balaji_ammu.blogspot.in/2013/11/deccan-chronicle.html

2007லிருந்து தொடர்ச்சியாக 6 ஆண்டுகள், (5 முறை) உலக செஸ் சேம்பியனாக வலம் வந்த ஆனந்த், சென்ற வருடம் சென்னையில் நடந்த உலக சேம்பியன்ஷிப் ஆட்டத்தில் இளம் செஸ் ஜாம்பவான் கார்ல்சனிடம் தோல்வியடைந்தபோது, பலரும் அவரது செஸ் வாழ்க்கைக்கு இறப்பறிக்கை எழுதி விட்டனர். அதற்குக் காரணம், 43 வயது ஆனந்தின் மனத்தளர்ச்சியும், முடிவாட்ட திறமைக்குறைவும் கார்ல்சனுக்கு எதிரான சில ஆட்டங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆனந்த் ரிடையர்மெண்ட்டை அறிவித்து விடுவார் என்று தான் நானும் நினைத்தேன்.

ஆனால், உண்மையான சேம்பியன்கள் தடாலடியாக முடிவெடுப்பதில்லை! சில மாதங்கள் ஓய்வுக்குப் பின், மார்ச் 2014ல் ரஷ்யாவில் நடைபெற்ற (கார்ல்சனுக்கு போட்டியாளரை தேர்ந்தெடுக்கும்) Candidates போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்தார். உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர்கள் (கிராம்னிக், டோபலோவ், ஆரோனியன், ஆண்ட்ரிகின், மமெதயரோவ், கர்ஜாகின், பீட்டர் ஸ்விட்லர்) பங்கு கொண்ட அந்த மிகக்கடினமான 14 சுற்றுகள் கொண்ட போட்டியில், மிகத் திறமையாக, புது உத்வேகத்துடன் விளையாடி, இறுதிச்சுற்றுக்கு முன்பாகவே, டோர்னமண்ட்டை வென்று, மீளொரு முறை 2014 உலக செஸ் சேம்பின்ஷிப் போட்டியில் கார்ல்சனை எதிர்கொள்ள தகுதி பெற்றார். நிச்சயமாக யாருமே எதிர்பார்க்காத விஷயமிது! ஆனந்தின் செஸ் மீதான காதல் அத்தகையது.

Candidates tournament பற்றி வாசிக்க:
http://www.thechessdrum.net/blog/2014/03/31/world-candidates-2014-14-anand-wins-naysayers-silenced/

உலக செஸ் சேம்பின்ஷிப் போட்டி இன்று (8 நவம்பர் 2014, மாலை 5.30) தொடங்குகிறது. எப்போதும் போல 12 கிளாசிக்கல் செஸ் ஆட்டங்கள் வாயிலாக, சேம்பியன் நிர்ணயிக்கப்படுவார். அதாவது, யார் முதலில் 6.5 புள்ளிகளைத் தொடுகிறாரோ அவரே சேம்பியன். 6-6 என்று நிலையில், 4 துரிதவகை செஸ் ஆட்டங்கள் நடைபெறும். இப்போட்டியிலும், ஆனந்த் under dog-ஆகத் தான் கருதப்படுகிறார் என்றாலும், அது அவருக்கு நல்லதே. சென்ற முறை அவர் சேம்பியனாக இருந்ததும், போட்டி சென்னையில் நடைபெற்றதும், அவருக்கு சற்று மன அழுத்தத்தை ஏற்படுத்தி பாதகமாகவே அமைந்தன. இம்முறை ஆனந்த் தனது இயற்கையான, சற்றே அதிரடியான ஆட்டத்தை (2013 உலக செஸ் சேம்பின்ஷிப் போட்டியின் 9வது ஆட்டம் போல) கைக்கொள்ளலாம்! அது பலன் தரும் என்பது என் எண்ணம். தற்காப்பு வகை ஆட்டம், ஒரு கால்பந்து ஆட்டக்காரருக்கு நிகரான கார்ல்சனிடம் பலனளிக்காது!

விஷி ஆனந்த் இன்று எழுதியிருப்பதை வாசிக்க: It is time to get into match mode!
http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31807&articlexml=It-is-time-to-get-into-match-mode-08112014017005

மேலும், கார்ல்சன் இவ்வருடம் நடைபெற்ற சில போட்டிகளில் சோபிக்கவில்லை. அதனால், முதல் 6 ஆட்டங்களில் சமநிலை இருப்பின், அவருக்கும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. செஸ் ஆட்டக்காரர்கள் பலர், ஆனந்த் இம்முறை நல்ல மனநிலையிலும், முன்னேற்பாடுடனும் இருக்கிறார் என்று கருதினாலும், தனது 44 வயதில், கார்ல்சனை வென்று ஆனந்த் மீண்டும் உலக சேம்பியன் ஆவது எளிதன்று. முக்கியமாக, முடிவாட்ட நிலை (End Game position) என்பது எளிமைப்படுத்தப்பட்ட ஒன்றாக இல்லாமல் இருக்குமாறும், நீண்ட ஆட்டங்கள் தரும் சோர்வினால் ஆட்டத்தில் தவறுகள் (Blunders) ஏற்படாமலும் ஆனந்த் பார்த்துக் கொள்வது அவசியமாகிறது.

---எ,அ,பாலா

Sunday, November 24, 2013

சச்சினை விட பாரத ரத்னாவுக்கு ஏற்றவர் விஷி ஆனந்த் - ஏன்? எனது Deccan Chronicle கட்டுரை

இது குறித்து நான் டெக்கான் குரோனிகள் நாளிதழில் எழுதியது இதோ.

It's high time Anand awarded the Bharat Ratna - கட்டுரையின் உரல்


Sunday, November 17, 2013

பாரத ரத்னா சச்சின் - விஷி ஆனந்த் சாதனையாளர் இல்லையா?

பாரத ரத்னா சச்சின் - விஷி ஆனந்த் சாதனையாளர் இல்லையா? - இட்லிவடையில் பதிப்பிக்கப்பட்டது
 
சச்சின் ஓய்வு பெற்ற நாளே, 40 வயதிலேயே, அவரது கிரிக்கெட் சாதனைக்காக, இந்திய அரசு அவருக்கு நாட்டின் மிக உயரிய சிவில் விருதான பாரத ரத்னாவை வழங்கி கௌரவித்துள்ளது. இது சரி தான், இல்லை, நாட்டுக்காக அவர் ஆற்றிய தொண்டு என்ன, நாட்டுக்கு நல்வகையில் பங்களிக்காத அந்த கிரிக்கெட் சாதனைக்கு பாரத ரத்னாவா என்று கேட்டு, இது சரியில்லை என்று இரு தரப்பு வாதங்களை பார்க்க முடிகிறது. ஒப்புக்குச் சப்பாணியாக, அவருக்கு மட்டும் விருது கொடுத்தால் பிரச்சினை வரக்கூடும் என்று கருதி, (எப்போதோ கொடுத்திருக்க வேண்டிய) CNR ராவ்-க்கும் இப்போது சேர்த்து வழங்கியுள்ளது நல்ல நகைச்சுவை.

நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில், கண்கூடாக பலன் தரும் சிலபல சாதனைகளை செய்தவர்களுக்கு மட்டும் தான் விருது என்றால், ஏற்கனவே (சமீப காலகட்டத்தில்) பாரத ரத்னா வழங்கப்பட்டவர்களில் சிலபலர் தேற மாட்டார்கள் என்பதை கவனிக்க வேண்டும். சச்சின் உட்பட இதுவரை 43 நபர்கள் இவ்விருதை பெற்றுள்ளனர். அப்பட்டியலில், 10 தென்னிந்தியர்கள் (அதிலும் முதல் மூவர் 1954-லிலேயே விருது பெற்றவர்கள் என்பதை நினைவு கொள்க!) மட்டுமே இருப்பதில் பெரிய ஆச்சரியம் ஏதும் இல்லை! ’தெற்கு தேய்கிறது, வடக்கு வாழ்கிறது’ என்ற கூற்று இன்று வரை பொருந்துகிறது!

இது போன்ற ஓரவஞ்சனையை காரணம் காட்டியே, பிரபல பாடகி எஸ்.ஜானகி, சென்ற வருடம் பத்மபூஷன் விருதை ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் காரணங்களுக்காகவே எம்ஜியாருக்கும், ராஜிவ் காந்திக்கும் பாரத ரத்னா தரப்பட்டது என்ற பேச்சிலும் நியாயமான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாட்டுக்கு தொண்டு, அதனால் விளைந்த நன்மை ஆகியவை மட்டுமே பாரத ரத்னா விருதுக்கான அளவுகோல்கள் அல்ல. ஒரு மனிதர், ஒரு துறையில் செய்த உயர்ந்த/ஒப்பில்லாத சாதனையை கௌரவப்படுத்தும் விதமாகவும் அது வழங்கப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அத்தகைய நோக்கில், சச்சினுக்கு விருது வழங்கப்பட்டது சரியே என்றாலும், அவரை விட விளையாட்டுத் துறையில் அதிகம் சாதித்த, இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர், இந்தியாவின் ஒரே செஸ் வைரம், இந்தியாவின் (ஏன் ஆசியாவின்) ஒரே உலக செஸ் சேம்பியன் (5 முறை பட்டம், கடந்த 6 ஆண்டுகளாக undisputed Chess champion of the World) விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்காமல், சச்சினுக்கு மட்டும் வழங்கியதற்கு நியாயமான காரணங்கள் எதுவுமில்லை என்பது நிதர்சனம்!

மேலே குறிப்பிட்டதில், World என்று வலியுறுத்தியதில் ஒரு காரணமுள்ளது. உலகில் 8 (ஒப்புக்குச் சப்பாணி நாடுகளை விட்டு விடலாம்) நாடுகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட்டில், ஒரு டீம் விளையாட்டில், சச்சின் சாதித்ததைக் காட்டிலும், 120 நாடுகளில் விளையாடப்படும், அன்றிலிருந்து இன்று வரை கடுமையான போட்டி நிலவி வரும், தனிமனித விளையாட்டான செஸ்ஸில் ஆனந்த் சாதித்தது மிக மிக மிக அதிகம் என்பதை அவர் சாதனைகளை உற்று நோக்கினாலே போதும்.

2012-ல் நான் எழுதிய இடுகையிலிருந்து சில விஷயங்களை பகிர்கிறேன்.



”இந்தியாவின் முதல் உலக ஜூனியர் செஸ் சேம்பியன், முதல் கிராண்ட் மாஸ்டர், முதல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர், துரித ஆட்டம், காய்களை பார்க்காமல் ஆட்டம், மொத்தப் புள்ளிகள் என்ற 3 பிரிவுகளிலும் உலகப் பிரசத்தி பெற்ற ஏம்பர் செஸ் டோர்னமண்ட் பட்டத்தை தனியொருவராக வென்ற முதல் செஸ் ஆட்டக்காரர் என்று பல முதல்கள் ஆனந்தின் செஸ் வாழ்க்கையில் விரவி இருக்கின்றன. அதோடு, இந்தியாவின் ஒரே உலக செஸ் சேம்பியன், கோரஸ் டோர்னமண்ட் பட்டத்தை 5 முறை வென்ற ஒரே மனிதர், மைன்ஸ் செஸ் பட்டத்தை 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்ற ஒரே ஆட்டக்காரர் என்று நாம் பிரமிக்கத்தக்க “ஒரே” ஒருவர் ஆனந்த் மட்டுமே. மிக உயரிய விருதாக கருதப்படும் செஸ் ஆஸ்கார் பட்டத்தை ஆனந்த் 6 முறை வென்றுள்ளார்.

இந்தியாவின் இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூஷனையும் ஆனந்த் பெற்றிருக்கும் நிலையில், ஒரு விளையாட்டு வீரருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமெனில், அதற்கு ஆனந்த் ஒருவரே மிக்க தகுதி படைத்தவர் என்று தாராளமாக சொல்ல முடியும்.”


மேலும், கடந்த 22 ஆண்டுகளாக ஆனந்த் நிகழ்த்தியுள்ள சாதனைகளால் இந்தியாவில் செஸ் விளையாட்டில் பெரும் ஆர்வம் ஏற்பட்டு, ஒரு செஸ் புரட்சியே நடந்துள்ளது. இப்போது இந்தியாவில் 34 கிராண்ட் மாஸ்டர்களும், 70-க்கும் மேற்பட்ட இண்டர்நேஷனல் மாஸ்டர்களும் உள்ளனர். பணம் அதிகம் புழங்காத செஸ் விளையாட்டில், இத்தகைய மறுமலர்ச்சியை, ஆனந்த் தனியொரு மனிதராக நிகழ்த்திக் காட்டியுள்ளார் என்றால் அது மிகையில்லை. இதை நிகழ்த்தியும், 27 ஆண்டுகளாக, இன்று வரை (44 வயது வரை) இந்தியாவின் தலை சிறந்த ஆட்டக்காரராக விளங்கி வருகிறார்! இவற்றுக்கும் மேல், ஆனந்த் எவ்வகையான சாதனை செய்து, பாரத ரத்னாவுக்கு ஏற்புடையவராக ஆக முடியும் என்று புரியவில்லை.

சௌரவ் கங்குலி, ஆனந்த் வெளிநாட்டில் (ஸ்பெயின்) அதிகம் தங்கி இருப்பதால், அவருக்கு பாரத ரத்னா வழங்க ஒரு தயக்கமிருக்கலாம் என்று கூறியிருப்பதை ஏற்க இயலாது. வெளி நாட்டவரான நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்கும்போது, வெளிநாட்டில் தங்கியிருக்கும் “இந்திய” ஆனந்துக்கு வழங்குவதில் என்ன தயக்கம்! ஆனந்த் வட இந்தியராக இருந்திருந்தால், அவரது மகா சாதனைகளுக்கு அவருக்கு இந்நேரம் பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டதற்கு, கிரிக்கெட் பிரபல விளையாட்டு என்பதனால், என்ற கூற்றை ஓரளவு தான் ஏற்க முடியும். பாரத ரத்னா பீம்சென் ஜோஷி மாமேதை என்பதில் ஐயமே இல்லை. ஆனால், அவரது ஹிந்துஸ்தானி இசையை எத்தனை சாதாரணர்களால் புரிந்து ரசிக்க இயலும். அதனால், பிரபலம் என்பது அளவுகோல் ஆகாது. உண்மை என்னவெனில், ஆனந்த் போல அல்லாமல், சச்சினின் இமேஜ் திறமையாக உருவாக்கப்பட்டு பேணிக் காக்கப்பட்டது. மீடியாவும் அதில் பங்களித்தது.

ஆனந்த், தனது ஒவ்வொரு பெரும் வெற்றிக்குப் பிறகு, மீடியாவில் தோன்றி, அதற்கான அவரது உழைப்பை, சிரமங்களைப் பற்றி பெரிய அளவில் பேசியதில்லை. அதனால், செஸ் விளையாட்டு குறித்து ஓரளவு அறிந்தவர் மட்டுமே, அவரது ஹிமாலய சாதனையின் வீச்சை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், சச்சினுக்கு பல மும்பை (சினிமா, அரசியல், தொழில்துறை) பிரபலங்களின் ஆதரவு சதாசர்வ காலமும் இருந்து வருகிறது. தெற்கில் இருக்கும் பிரபலங்களும், இந்திய செஸ் ஃபெடரேஷனும் இது போன்ற ஒரு status-ஐ ஆனந்துக்கு ஏற்படுத்த தவறி விட்டனர். இதனாலேயே, ’சச்சினுக்கு பாரத ரத்னா’ என்பது கடந்த 2 ஆண்டுகளாக கேட்டது போல ஆனந்துக்கு பாரத ரத்னா என்ற கோரஸ்/கோஷம் எந்த மட்டத்திலும் பெரிதாக கேட்காததற்கு இன்னொரு முக்கியக் காரணம்.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சச்சினை ராஜ்யசபா உறுப்பினராக ஆக்கியுள்ளது. இப்போது, சரியான சூழலில், அவருக்கு பாரத ரத்னா வழங்கி அவரை காங்கிரஸ் அனுதாபியாக மாற்றியிருக்கிறது. மெல்ல மெல்ல, அவரை தேர்தல் பிரச்சாரத்துக்கு ஓரளவுக்கு பயன்படுத்திக் கொள்ள ஒரு யுக்தியாக இது இருக்கலாம். நன்றியுணர்ச்சி சச்சினுக்கு மட்டும் இல்லாமல் இருக்குமா?!? இறுதியாக, சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கக்கூடாது என்பதல்ல வாதம். அவரை விட மகத்தான (விளையாட்டில்) சாதனையாளரான உலக செஸ் சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்காததில் உள்ள நியாயமின்மையும், அரசியல் சார் ஓரவஞ்சனையும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.



இந்த இரண்டு கட்டுரைகளை (ஒன்று ஆனந்த் பற்றி, ஒன்று சச்சின் பற்றி) கட்டாயம் வாசிக்கவும்.

Viswanathan Anand is as precious as Sachin Tendulkar -----
http://www.rediff.com/sports/slide-show/slide-show-1-viswanathan-anand-is-as-precious-as-sachin-tendulkar/20131109.htm#5

Master Blaster or Master Laster: A revisionist look at Sachin Tendulkar’s career -----
http://www.livemint.com/Opinion/PKgPHTk5wKn8DZLRpCtCyK/Master-Blaster-or-Master-Laster-A-revisionist-look-at-Sachi.html

- எ.அ.பாலா

Monday, July 29, 2013

வாலி(ப) சகாப்தம்

வாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா
வாலி ஒரு மகா கவிஞன் என்பதைத் தாண்டி அவரின் மிகப்பெரிய சாதனையாக நான் கருதுவது, தனது கடைசி மூச்சு வரை தன்னை RELEVANT ஆக வைத்துக் கொண்ட தன்மையைத் தான். இறுதி வரை தன்னை புதுப்பித்துக் கொண்டே இருந்தார் என்று தான் கூற வேண்டும். அதனாலேயே, அவரால் எம்ஜியார் தொடங்கி தனுஷ் வரை ஹிட் பாடல்களை அள்ளி வழங்க முடிந்தது. கண்ணதாசனுக்கு அடுத்து அவரளவுக்கு மொழியை வசப்படுத்தி வைத்திருந்தவர் யாருமில்லை. கற்பனை வளம், சொல் ஆளுமை (vocabulary), தமிழ் மேல் காதல் என்ற மூன்றும் அதீதமாக வாய்க்கப் பெற்றவர் வாலி. 15000-க்கும் மேல் பாடல்கள் புனைந்த அவர், தமிழ் பாடலாசிரியர்களில் சச்சின் டெண்டுல்கர்.

ஸ்ரீரங்கம் அருகே திருப்பராய்த்துறையில் 1931-ல் டி.எஸ்.ரங்கராஜனாக் பிறந்து, சென்னை கலைக்கல்லூரியில் பயின்று, வாலி சில ஆண்டுகள் ஆல் இந்தியா ரேடியோவில் பகுதி நேர வேலை பார்த்தவர். சினிமா வாய்ப்புக்காக அலைந்த சமயத்தில், அவருக்கு உதவியவர்களில் குணச்சித்திர நடிகர் வி.கோபாலகிருஷ்ணனும், பாடகர் டி.எம்.எஸ்ஸும் முக்கியமானவர்கள். வாலி வார்த்தைச் சித்து விளையாட்டில் கை தேர்ந்தவர் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் டி.எம்.எஸ். வாலி டி.எம்.எஸ்-ஸுக்கு ஒரு போஸ்ட் கார்டில் அனுப்பிய கவிதை, இசை வடிவம் பெற்று, டி.எம்.எஸ்-ஸாலேயே பாடப்பட்டு ”கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” என்று AIR-ல் பெரும்பிரபலம் அடைந்தது. ’அழகர் மலைக்கள்ளனாக’ ஆரம்பித்த வாலியின் சகாப்தப் பயணம் ‘காவியத்தலைவனாக’ முடிவுற்றதில் ஆச்சரியமில்லை!



எம்ஜியாருக்கு வாலி எப்போதும் “ஆண்டவரே” தான். எம்ஜியாருக்காகவே எழுதப்பட்ட ஹிட் பாடல்கள் தான் எத்தனை!

1. தரை மேல் பிறக்க வைத்தான்
2. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
3. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
4. கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்
5. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு
6. கண் போன போக்கிலே கால் போகலாமா
7. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே


என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

வாலி என்று தனக்கு நாமகரணம் செய்து கொண்டதற்கு அவருக்கு ஓவியர் மாலி மேல் இருந்த அபிமானமே காரணம். வாலியே ஓரளவுக்கு நன்றாக வரைவார். வசன கவிதையில் / பேச்சில் எதுகை மோனையில் அவரை விஞ்ச இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும். அவரது திரைப்பாடகளில் மட்டுமன்றி, அவரது கலகலப்புப் பேச்சிலும் ஒரு தன்னிச்சையான இயல்பு (spontaneity) இருந்ததும், அவரது பேச்சை கேட்கத் தூண்டுவதாக இருந்தது.
“ஊக்குவிக்க ஆளிருந்தா ஊக்கு விக்கறவன் கூட தேக்கு விப்பான்”

ஒரு முறை வாலி வீட்டுக்கு ஒரு பாம்பு வந்த விஷயம், நாளிதழ்களில் முக்கியச் செய்தியாக வந்து விட, பலரும் அவரை விசாரிக்க, ஒருவர் மட்டும் “உங்க வீட்டுக்கு மட்டும் ஏன் பாம்பு வர வேண்டும்?” என்று குசும்பாக கேட்க, வாலி தனக்கே உரித்தான பாணியில், “படமெடுக்கறவங்க எவ்வளவோ பேர் வராங்க, பாம்பு வந்தா என்னய்யா!” என்று ஒரு போடு போட்டாராம். பிறிதொரு சமயம், எம்ஜியார், வாலியை வெறுப்பேத்த, ”உலகம் சுற்றும் வாலிபன்” படத்தின் டைட்டில் கிரெடிட்ஸில், பாடலாசிரியாராக வாலியின் பெயரை போடப் போவதில்லை என்று சொன்னபோது, வாலி உடனே “அப்படி உங்களாலே படத்தை ரிலீஸ் பண்ணவே முடியாது” என்றாராம். எம்ஜியார் விடாப்பிடியாக, ‘பண்ணிக்காட்டறேன் பாருங்க’ என்று கூற, வாலி “அதெப்படி ’வாலி’ இல்லாம நீங்க படத்தை ‘உலகம் சுற்றும் பன்’ என்றா ரிலீஸ் பண்ணுவீங்க?!” என்றவுடன் எம்ஜியார் சிரித்து விட்டு வாலியை தழுவிக் கொண்டாராம்.

அய்யங்காரான வாலிக்கு மீன் குழம்பு பிடிக்கும் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. சிலபல சமயங்களில் கட்டாயத்தின் பேரிலோ (நட்பின் பேரிலோ!) அவரது அரசியல் சார்பு ஜால்ரா தான் சற்று அயற்சியைக் கொடுத்தது. ஆனால், அதிலும் இருந்த மொழி வளமும், சொல் விளையாட்டும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. எ.கா: ’ஏ.எம், பி.எம் பார்க்காத ஒரே சி.எம் நீ தான்’. வாலியின் (கலைஞருக்கு) ஜால்ரா கவிதை ஒன்றை இங்கே காணலாம்.


இந்தக் கவிதையிலும் (ஆண்டு 2007-ல் எமனிடம் இருந்து நீ என்னை மீட்டாய். அதற்கு முன் ஆண்டு 2006-ல் ஓர் 'உமனிடம்' இருந்து தமிழ் மண்ணை மீட்டாய்), இது தவிர ஓரிரு சமயங்களிலும், வாலி ஜெ.ஜெ-வை கிண்டலாக விமர்சித்திருந்தாலும், புள்ளி விவரங்களுடன் விமர்சகர்களுக்கு பதில் / விளக்கம் தரும் ஜெ.ஜெ, வாலி குறித்து எதுவுமே பேசியதில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அது போல, பெரும்பாலான சினிமா ஆசாமிகள் போல அரசியல் சூழலுக்கு ஏற்றாற் போல் வாலி ஜால்ரா தட்டவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். கருணாநிதி மேல் கடைசி வரை வாலி அபிமானத்துடனே இருந்தார்!

பிடித்த வாலியின் பாடல்கள் என்று பெரிய ஒரு லிஸ்ட் இருந்தாலும், சிலபல பாடல்கள் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

1. வெண்ணிலா வரும் வேளையில் நான் விழித்திருந்தேன், என்னவோ கனவுகளில்...
2. மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டனே
3. மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
4. கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை
(ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா, வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா - மறக்க முடியாத சரண வரிகள்)
5. வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
6. காதோடு தான் நான் பாடுவேன், மனதோடு தான் நான் பேசுவேன்
7. ஒன்னை நினைச்சே பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
8. நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்

9. வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
10. அம்மா என்றழைக்காத உயிரில்லையே
11. காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா


வாலி பாடலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கியத்துவம் தருபவர். “சீனத்து பட்டு மேனி உந்தன் சிட்டு மேனி” என்ற  பாடலுக்கு, பல்லவி வரிக்கு முன் ஒரு சொல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யாரோ பிரியப்பட, வாலி “செஞ் சீனத்து பட்டு மேனி உந்தன் சிட்டு மேனி” என்று பல்லவியை ஒரு நொடியில் அழகாக்கி விட்டார். வாலிக்குப் பிடித்த பாடல் குறித்து, ஒரு பேட்டியில், ஒரு வரலாற்றைப் பதிவு செய்த வகையில் அமைந்த கண்ணதாசனின் “நிலவைப் பார்த்து வானம் சொன்னது...” பாடலை வாலி பிரமிப்புடன் குறிப்பிட்டு இருக்கிறார். அப்பாடலில் வரும் 

புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல் தான் அது
திரு நீலகண்டரின் மனைவி சொன்னது”
என்ற சரண வரிகளை நினைவு கூர்க!

வாலி கண்ணதாசன் மேல் பெருமதிப்பு வைத்திருந்தவர். சமீபத்தில் வாலி பற்றிய சந்தக்கவிதையாக எழுதப்பட்டதில் “கண்ணதாசன் கொடி அகற்றி கண்ணதாசனை வென்றாய்” என்பதை ஏற்றுக் கொள்ள வாலி ஒரேடியாக மறுத்து, பின்னர் அவ்வரிகள் “கோடி கோடி கனவோடு கோடம்பாக்கம் வந்தாய்; கண்ணதாசன் கொடியோடு கொடி நாட்டி நின்றாய்” என்று மாற்றப்பட்டது.

எண்பத்து ஒன்று வரை தமிழ் எழுதி
கண்பட்டும் நிறைவாகவே வாழ்ந்த பின்னும்
மண்பட்டு உன் உடல் போகையிலே
புண்பட்டுப் போனாளய்யா தமிழன்னை!


என்று அவருக்கு உரித்தான ஸ்டைலிலும், “ராஜனுக்கு ராஜன் எங்க ரங்கராஜன் தான்” என்ற அவரது தசாவதார பாடல் வரிகள் வாயிலாகவும், வாலி அவர்களுக்கு அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன். அவரது விஜயத்தால், பரமபதம் இப்போது கலகலப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்

Saturday, February 09, 2013

டோண்டு மரணம் - தினகரன் தலையங்கம்

டோண்டு மரணம் - தினகரன் தலையங்கம்

பிப் 7ஆம் தேதியன்று தினகரன் நாளிதழில் டோண்டு ராகவன் சார் பற்றிய தலையங்கம் வந்துள்ளது.

இரண்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

1. எனது இந்த அஞ்சலி இடுகையில் டோண்டு சாரின் நண்பர்கள் / வாசகர்கள் தங்கள் இரங்கல்களை பதிவு செய்துள்ளனர் என்பதைத் தவிர்த்து, நான் அறிந்த வரையில் சுமார் 25 தமிழ் வலைப்பதிவர்கள் டோண்டு சாருக்கு அஞ்சலி இடுகைகளை சமர்ப்பித்துள்ளது, அன்னார் தனது எழுத்துகள், நேர்மை மற்றும் நட்பு பாராட்டும் இயல்பு வாயிலாக எத்தனை பதிவர்கள் / வாசகர்கள் மனதில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது!  அந்த அஞ்சலி இடுகைகளின் தொடுப்புகளை எனது இடுகையின் இறுதியில் அளித்துள்ளேன்.

2. இன்று பொழுது போகாமல், டோண்டு சாரின் வலைப்பதிவில், எனது பெயரை கூகிளியதில்,  60-க்கும் மேற்பட்ட இடுகைகளில் ஏதோ ஒரு விஷயத்துக்காக என்னை அவர் சுட்டியிருப்பதை  இப்போது தான் முதன் முதலாக கவனிக்கிறேன்.  சிலவற்றை வாசிக்கையில் அவர் என் மேல் வைத்திருந்த அபிமானம் / நட்பு பிரமிக்க வைப்பதாக இருக்கிறது !  His death is a great personal loss to me!

எ.அ.பாலா

Wednesday, February 06, 2013

டோண்டு ராகவன் சார்

டோண்டு ராகவன் சார்

திரு.டோண்டு ராகவன் இயற்கை எய்தி விட்டது குறித்து என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். அப்போதைய மனநிலையில் விரிவாக எழுதவில்லை. இன்று காலையில் அவரது மரணச்செய்தி கிடைத்தபோது, 4 ஆண்டுகளுக்கு முன் எனது அக்கா மகன் அகாலமாக ஒரு விபத்தில் மரணித்தபோது ஏற்பட்ட அதே வலியை / தாக்கத்தை உணர்ந்தேன். அதற்கு அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் ஒரு காரணம்.

திருவல்லிக்கேணியும், இந்து உயர்நிலைப்பள்ளியும் தான் எங்கள் 8+ ஆண்டுகளுக்கான நட்புக்கு அச்சாரமிட்ட விஷயங்கள். 2004-ல் என் இடுகை ஒன்றை வாசித்து விட்டு என்னை தொடர்பு கொண்டு வலைப்பூ தொடங்குவது மற்றும் தமிழ் தட்டச்சு பற்றி கேட்டறிந்து கொண்டு அன்று எழுத ஆரம்பித்தவர், இறப்பதற்கு 2 நாட்கள் முன் வரை ஓயாமல் (சுமார் 1000 இடுகைகள் இருக்கலாம்) எழுதி வந்திருக்கிறார். அவர் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை என்று தோன்றுகிறது. அது போல, கடைசி வரை ஏதாவது வாசித்துக் கொண்டே தான் இருந்தார்!

வாசிப்பனுபவம் அவரது மிகப்பெரிய பலம்! அதனால் அவரது தகவல்களில் தவறு காண்பது அரிது. அரசு நிறுவனத்தில் பொறியாளர் பதவியை உதறி விட்டு, தனக்குப் பிடித்தமான (பிரெஞ்சு, ஜெர்மன்) மொழிபெயர்ப்புத் தொழிலை இறுதி வரை மேற்கொண்டிருந்தவர். அவர் நேற்று தொடங்கிய மொழிபெயர்ப்பு பணி ஒன்று அவரது மடிக்கணினியில் அவருக்காக காத்து கொண்டிருக்கிறது! கடுமையான உழைப்பாளி அவர்.

போலி டோண்டு விவகாரத்தின்போது (அதில் அவர் நேரவிரயம் செய்திருப்பினும்) அவரது மன உறுதி பளிச்சிட்டதை பலரும் ஒப்புக் கொள்வர். தனது கருத்துகளின் மேலிருந்த பிடிப்பால், பலமுறை வலைப்பூ விவாதங்களில் அவர் ஈடுபட்டிருந்தாலும், தனிப்பட்ட அளவில் பலருடனும் இனிமையாக நட்பாகப் பழகியவர் என்பதை நான் அறிவேன். போலித்தனம் துளியும் இல்லாதவர். அவருடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில், யாரையும் அவர் நிந்தித்துப் பேசி நான் கேட்டதில்லை. அவரவர் கருத்து அவரவருக்கு என்று போய்க்கொண்டே இருந்தவர்.

அவரது மரணத்திற்கு பாலபாரதி, நைஜீரியா ராகவன், லக்கிலுக், உண்மைத்தமிழன், ரஜினி ராம்கி ஆகியோர் வந்திருந்தனர். பாலா ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர் டோண்டு சார், அதுவே அவரது தனித்துவமான சிறந்த பண்பு’ என்றார். உ.தமிழன் டோண்டுவைப் போல் எழுத இனி ஆள் கிடையாது என்றும், அவரது மரணம் தமிழ் வலையுலகுக்கு பெரும் இழப்பு என்றும் வருந்தினார். ர.ராம்கி, போலி டோண்டு விவகாரத்தில் தான் சிக்கியிருந்தால், தமிழ் இணையத்தை விட்டே ஓடியிருக்கக்கூடும் என்று டோண்டுவின் மனத்திண்மையை வலியுறுத்திப் பேசினார்.

புற்று நோய்க்கு எதிரான தனிப்பட்ட போராட்டத்திலும் அவரது அந்த மனத்திண்மையை பார்க்க முடிந்தது. தனக்கு கேன்ஸர் என்பதையே நோய் வந்து ஒரு 3 மாதங்களுக்குப் பின் தான் (சொல்லாவிட்டால் பின்னால் நான் கோபப்படுவேன் என்பதற்காக) தயங்கித் தயங்கி என்னிடம் தெரிவித்தார். எனக்கு தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதனை அறிமுகம் செய்து வைத்தவரும் அவரே! அதுவே, என் நவதிருப்பதி விஜயத்துக்குக் காரணமாக அமைந்தது. ஆன்மீகம் பற்றி டோண்டு அவர்கள் அதிகம் எழுதியிராவிட்டாலும், பெருமாள் மேல் ஆழ்ந்த பக்தியும், நம்பிக்கையும் கொண்டவர். என் திருப்பாவை இடுகைகளின் ரசிகர் அவர், பலமுறை மனதார பாராட்டியும் இருக்கிறார்.

“உங்கள் தாயார் ரொம்ப கஷ்டப்பட்டு உங்களை ஆளாக்கியிருக்கிறார். அவரை கடைசி வரை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று என் வீட்டுக்கு வரும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். என் மகள்களை (அவருக்கு வாய்க்காத) பேத்திகளாக பாவித்து அன்பு செலுத்தியிருக்கிறார். என் தந்தையும், என் மனைவியின் தந்தையும் என் மகள்கள் பிறப்பதற்கு முன்னமே இறந்து போனதால், என் மகள்களுக்கு அறிமுகமான முதல் தாத்தா (இந்த அடைமொழி அவருக்குப் பிடிக்காதிருந்தபோதிலும்) டோண்டு ராகவன் சார் தான்!

டோண்டுவிடம் சிலபல குறைகள் இருந்திருக்கலாம். ஆனால் அவரது பிரத்யேக குணங்களான, கடும் உழைப்பு, நிறைந்த வாசிப்பனுபவம், போலித்தனமின்றி நட்பு பாராட்டும் / உதவும் குணம், மன உறுதி, சிறந்த அறிவாற்றல், அசாத்திய மொழித்திறமை ஆகியவற்றை 8 ஆண்டுகளூக்கும் மேலாகஅருகிலிருந்து கவனித்தவன் என்ற வகையில், அவர் ஒரு மாமனிதர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

ஒரு 7 மாதங்களுக்கு முன் டோண்டு குடும்பத்துடன் மகர நெடுங்குழைக்காதனை தரிசிக்க சென்றபோது, உடல் நிலை சற்றே சரியில்லாத காரணத்தால், அவரை மதுரையிலேயே விட்டு விட்டு அவரது குடும்பத்தினர் மட்டுமே தென் திருப்பேரை சென்று பெருமாளை தரிசித்ததாக அவரது துணைவியார் என்னிடம் கூறினார். டோண்டு சாரின் அந்த மனக்குறையை மகரநெடுங்குழைக்காதனே நிவர்த்தி செய்தது தான் விசேஷமான விஷயம். 2 மாதங்களுக்கு முன் டோண்டுவை தன்னிடம் வரவழைத்து அவருக்கு திவ்யமான தரிசனத்தை வழங்கியிருக்கிறார். மகரநெடுங்குழைக்காதன் மீது அவருக்கு இருந்த பரமபக்தி அத்தகையது! 

எந்தரோ மகானுபாவுலு, அந்தரி கி வந்தனமுலு --
டோண்டு ராகவன் சாரின் ஆன்மா சாந்தியடைய நான் வணங்கும் பரமபத நாயகனை வேண்டிக் கொள்கிறேன்!

எ.அ.பாலா

பிரபல வலைப்பதிவாளர் டோண்டு ராகவன் மரணம்

பிரபல வலைப்பதிவாளர், அருமை நண்பர் டோண்டு ராகவன் அவர்கள் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக காலமாகி விட்டார் என்ற செய்தி வந்தபோது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. என்னளவில் இது மிகப் பெரிய இழப்பு! இன்று காலை 11 மணி அளவில் தகனம். 2004-ல் என் வலைப்பதிவை பார்த்து விட்டு, தானும் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றவன் என்று சொல்லி என்னுடன் அறிமுகமானார். அப்போது அவர் எனக்கு எழுதிய முதல் மடல் இது !

Triplicane memories and greetings from Dondu 

From narasimhan raghavan

To balaji_ammu@yahoo.com

Dear Balaji,
Yesterday I came to Triplicane. Had a leisurely walk down Pycrofts Road browsing the books in the platform shops. As I passed the Neeli Veerasami Chetty Street cutting, I thought of you but could not make it to your place as I do not know your address. It is also possible that you might have been still at office (5PM). If you have no objection, do email me your residential phone number and address. I will come to your place next time I come that side, if I may.

Do drop in at my place in Nanganallur. (20/B-23, 15th Cross Street, Hindu Colony, Opposite the new Nanganallur bus terminus). You have my telephone numbers already. Your blog about Vegundu was quite good.

Regards, N.Raghavan

என்னிடம் மிகுந்த அன்பாகப் பழகியிருக்கிறார். நிறைந்த வாசிப்பனுபவம் மிக்கவர். அசாத்தியமான மன உறுதி கொண்டவர். சுறுசுறுப்பின் இன்னொரு பெயர் டோண்டு என்று கூட சொல்லலாம். தமிழ் வலையுலகில் அவரது பிரபலத்தைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை!  இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன் கூட தன் வலைப்பதிவில் ஒரு இடுகையை பதிந்திருக்கிறார்!  8+ ஆண்டுகளில் சுமார்  1000 இடுகைகள் பதிந்திருப்பார் என்பது என் அனுமானம்.

புற்று நோயை எதிர்த்துப் போராடி அதில் வெற்றியும் பெற்றவர். அந்த கடினமான கால கட்டத்தில் கூட இயல்பாக இருக்கவே செய்தார் என்று நான் அறிவேன். இறுதி வரை கடுமையாக உழைத்திருக்கிறார். பல முறை என் வீட்டுக்கு வந்திருக்கிறார். என் குழந்தைகள் அவரது ரசிகைகள்! சமீபத்தில் (அவருக்குப் பிடித்தமானவார்த்தை இது!) மிகுந்த நோய்வாய்ப்பட்டிருந்த என் அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வந்தபோது, என் அம்மா அவரை யாரென்று கண்டு கொண்டபோது, சந்தோஷம் அவருக்கு.

அந்த ஒரு முறை தான், நடப்பது கூட பிரயத்தனமாக இருப்பதாகக் கூறினார். அயற்சி என்றே கூறாதவர் அப்படி சொன்னபோது, மனது சங்கடப்பட்டது. எனது வலைப்பதிவு மூலம் செய்து வந்த சமூக உதவிகளுக்கு பெரிய ஊக்கமாக இருந்தவர். டோண்டு போல் ஒரு மனிதரை நான் பார்த்ததும் இல்லை, இனிமேல் பார்க்கப் போவதுமில்லை. அவரது ஆத்மா சாந்தியடைய அவருக்கு மிகவும் பிடித்த தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதனை வேண்டிக் கொள்கிறேன்!

எ.அ.பாலா

தொடர்புடைய அஞ்சலி இடுகைகள்:



டோண்டுவின் மரணம்- தினகரன் தலையங்கம்

அஞ்சலி – டோண்டு ராகவன் - திருமலை ராஜன்

டோண்டு ராகவன் - அஞ்சலி..!  - உ.தமிழனின் சிறந்த அஞ்சலி

பந்திகொள்ளும் டோண்டூ இராகவன் அவர்கள்! -ப.வி.ஸ்ரீரங்கன்

டோண்டு சாரின் ஜெயா டிவி நேர்முகம் - சின்னக்குட்டி

பாண்டுச் சோழன் சரித்திரம் - பினாத்தல் சுரேஷ்

'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு !- கோவி கண்ணன்

திரு.டோண்டு ராகவன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள். -
சாதி இனிஷியல் மாதிரி - யுவகிருஷ்ணா
டோண்டு ராகவன் - பத்ரி சேஷாத்ரி
நண்பர் 'டோண்டு' ராகவன் - மதிபாலா

டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை! - சுவனபிரியன்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

Dondu Raghavan Sir, We miss you!! - பழமை பேசி

அமரர் டோண்டு ராகவன்..

டோண்டு சார் - கானா பிரபா

டோண்டு ராகவன்.- கேபிள் சங்கர்

சென்று வாருங்கள் டோண்டு - செல்வன்

பதிவர் திரு டோண்டு ராகவன்!

மூத்த பதிவர் டோண்டு ராகவன் மறைவின் நினைவாக

  டோண்டு ராகவன் - சந்திரவதனா

டோண்டு ராகவன் இறைவனடி சேர்ந்தார்-அருண்

பதிவர் டோண்டு மரணம் - பலூன் மாமா

டோண்டு ராகவன் சார்! - உலகநாதன்
டோண்டு - துளசி தளம்

டோண்டு சார்- இன்னும் வாழ்ந்திருக்கலாம் - உஷா

டோண்டு ராகவன் சார் – அஞ்சலி-பால அனுமான்
டோண்டு ராகவன் மறைவு-பெருங்குளம் ராமகிருஷ்ணன்
டோண்டு! - சரவணகுமார்
டோண்டு ஐயாவுடனான என் நேரங்கள் - அருண் பிரபு
டோண்டு ராகவன் – அஞ்சலி - மலர்மன்னன்

 

 

Friday, December 14, 2012

அம்மா

தீச்சட்டியைத் தூக்கிக் கொண்டு அவளது இறுதிப்பயணத்தை தொடங்கி வைத்ததிலிருந்து, பிடிசாம்பலாக அவளை சமுத்திரத்தில் கரைத்தது வரை நாற்பது+ ஆண்டுகளுக்கான எத்தனையோ ஞாபகங்கள் அலை மோதின.  பொதுவாக எல்லாரும் கூறியது, “கஷ்டப்படாமல் கஷ்டப்படுத்தாமல் போய் சேர்ந்து விட்டாள், கொடுத்து வைத்தவள், நல்ல பிள்ளைகள், நன்றாக பார்த்துக் கொண்டார்கள்”.  அவள் கொடுத்து வைத்தவளும் கிடையாது, நாங்கள் சுமாரான பிள்ளைகள் என்ற 2 விஷயங்களும் எனக்குத் தெரியும். 

ஆண் துணையில்லாமல் தனியாளாக பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க அவள்  பட்ட பாடு அசாதாரணமானது.  உறவினரிடம் உதவி கேட்பது கூட அவளது இயல்புக்கு ஒவ்வாத ஒன்று.  கடைசி 3 மாதங்கள் படுக்கையில் இருந்தது அவளுக்கு பெரிய கஷ்டமெல்லாம் கிடையாது.  வாழ்க்கையில் எவ்வளவோ இன்னல்களை சந்தித்திருக்கிறாள்!

கவனித்துக் கொள்ள பத்து பேர் இருந்தும், பிறரை நம்பி வாழும் உபயோகம் இல்லாத வாழ்க்கை தேவையில்லை என்று மூச்சை நிறுத்திக் கொண்டாள் என்று தான், கடைசி நிமிடத்தில் கூட இருந்த (அந்த அளவுக்காவது புண்ணியம் செய்திருக்கிறேன்!) எனக்குத் தோன்றியது.  அமைதியான ஒரு புன்னகையோடு மரணத்தை ஏற்றுக் கொண்டாள் என்று தான் கூறுவேன்.  பிள்ளைகள் நாங்கள், அவளை, யார், எவ்வகையில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவளது அப்ரூவல் இல்லாமல் போட்டு வைத்திருந்த திட்டத்தை ஏளனம் செய்து விட்டு ஒரு நொடியில் போயே விட்டாள்.

’அம்மா நம்பர் ஒன்’ என்றோ, அனைத்திலும் பர்ஃபெக்ட் என்றோ அவளைக் கூற மாட்டேன். ஆனால், சில பிரத்யேக குணங்களை உள்ளடக்கி இருந்தாள்.  அந்த இளமைக்கால வறுமையிலும், ஒரு போதும் மனம் தளரவே மாட்டாள், கஷ்டம் என்று ஒரு புலம்பல் கிடையாது, இயல்பாக பிறர்க்கு மனமிரங்குவது, உதவுவது என்பது அவளிடமிருந்து மட்டுமே நான் கற்றதும் பெற்றதும்!

குடும்பத்தில் எல்லாரை விடவும் அவள் கெட்டிக்காரியாக இருந்தும், பெண் என்பதால் மேல் படிப்பு படிக்க முடியாமல் போனது என்று பெங்களூர் மாமா அடிக்கடி சொல்லுவார். அவள் போன பிறகு வந்த மடல் வழி இரங்கல் செய்திகளும், பிறர் என்னிடம் பேசியதும், அவள் கூடவே 40+ ஆண்டுகள் இருந்தும், அவளைப் பற்றி நான் முழுமையாக அறியாததை பறைசாற்றின!  காரணம் எளிமையானது, செய்ததை சொல்லிக் கொள்வதை அவள் விரும்பியதில்லை. 

எவ்வளவோ ஞாபகங்கள்! இப்போது கோர்வையாக எழுத கை வரவில்லை. பொறியியல் கல்விக்கான முதல் லிஸ்ட்டில் என் பெயர் இல்லை, வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் இருந்தேன்.  கிடைக்க ஓரளவு வாய்ப்பிருந்ததும் எனக்கு விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்.ஸி சீட் கிடைத்து சேர்ந்தும் விட்டதாலும், குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாகவும் எனக்கு பொறியியலில் பெரிய ஆர்வமில்லை.

அந்த சூழலிலும், படிப்பில் மிக்க ஆர்வமிருந்த கெட்டிக்கார மகனை எஞ்சினியர் ஆக்க வேண்டும் என்பதில் அவளிக்கிருந்த திடமும், அதற்கு அவள் மேற்கொண்ட முயற்சியும், எனக்களித்த ஊக்கமும் அசாதாரணமானவை.  அதை விட அசாதாரணமானதாக நான் நினைப்பது, எந்த ஒரு தருணத்திலும், நான் எஞ்சினியர் ஆனதற்கு தான் மட்டுமே காரணம்
என்பதை சுட்டிக்காட்டாத, பதிலுக்கு எதுவுமே எதிர்பார்க்காத அவளது பெருந்தன்மை!

அதீத வறுமையிலும், அது அதிகம் தெரியாத, நாங்கள் உணராத வகையில் எங்களை அவள் வளர்த்தது எப்படி என்பது இன்றளவும் வியப்பு தான்.  ஆசிரியை தொழிலோடு, ஹிந்தி டியூஷன், புடவை வியாபாரம், சீட்டு பிடிப்பது என்று சாப்பாடு, தூக்கமில்லாமல் உழைத்திருக்கிறாள்.  பள்ளிக்காலத்தில் அவள் உட்கார்ந்து சாப்பிட்டு நான் பார்த்ததில்லை என்பது இப்போது உறைக்கிறது! 

 பள்ளிக்காலத்தில், நனறாக படித்து, மதிப்பெண்களையும், பரிசுகளையும் அள்ளிக் கொண்டு வந்து நான் காட்டியபோதும், ஆர்ப்பாட்டம் துளியுமின்றி, “குட்” என்று மட்டும் சொல்லி, ‘நீ நனறாக படித்து முன்னுக்கு வருவது நியமிக்கப்பட்டது’ என்பதை எளிமையாக தெளிவாக எனக்கு அப்போதே புரிய வைத்ததை இப்போது நினைக்கையில், மனம் கனக்கிறது.

வயதான பின் ஏற்பட்ட உடல்நிலைப் பிரச்சினைகளுக்கு டாக்டரிடம் போய் விட்டு வந்த விஷயங்களைக் கூட என்னிடம் பெரிதாகக் கூறியதாக நினைவில்லை.  ஒன்றுமே முடியாத இந்த கடைசி ஆறு மாதங்கள் தவிர்த்து, நான் அவளுக்கு உதவியதாக கூற முடியாத அளவில், என்னை பெரும் கடனாளியாக்கி விட்டு சட்டென்று சென்று விட்டதை நினைக்கையில், வேதனையை விட வெறுமையே மிஞ்சி நிற்கிறது!

எ.அ.பாலா

பிற்சேர்க்கை: அவள் தானமளித்த கண்கள் யாரோ இருவருக்கு ஒளி தரப் போகிறது என்பது  மட்டுமே இந்தச் சூழலில் ஆறுதல்!

Sunday, June 03, 2012

விஸ்வநாதன் ஆனந்த் - ஒரு செஸ் சகாப்தம்

விஸ்வநாதன் ஆனந்த் - ஒரு செஸ் சகாப்தம்


நான் ஆனந்த்-கெல்ஃபாண்ட் உலக செஸ் சேம்பியன்ஷிப்பில் சில ஆட்டங்கள் குறித்து இட்லிவடையில் ஒரு வாரத்திற்கு முன்னர் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது, ஆனந்த் உலக சேம்பியன் பட்டத்தை அடுத்த 2 வருடங்களுக்கு தக்க வைத்துக் கொண்டதற்குப் பிறகு எழுதுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 42 வயதில் ஆனந்த் பெற்ற இந்த இமாலய வெற்றிக்கு, அவருக்கு செஸ் மேல் எள்ளளவும் ஆர்வம் குறையாமல் இருப்பதே முக்கியக் காரணம் என்றால் அது மிகையில்லை. செஸ்ஸில் தொடக்க ஆட்ட ஆராய்ச்சியையும், கற்றலையும் செஸ் விளையாட்டின் மீது ஒரு வித காதலோடு அவர் செய்ததும், தொடர்ந்து செய்து வருவதுமே, அவர் பல சிகரங்களைத் தொட பெரிதும் உதவின. அதோடு, கடினமான தருணங்களில் ஒரு சேம்பியனுக்கே உரித்தான மன உறுதியும், தளரா நரம்புகளும் அவருக்கு பெரும்பலமாக அமைந்து வந்திருக்கின்றன. ஒரு மோசமான தோல்விக்குப் பின் 8வது ஆட்டத்தில், 17-ஏ நகர்த்தல்களில் கெல்ஃபாண்டை அவர் வீழ்த்தியது இதற்கு சிறந்த உதாரணம். கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டிடம் இத்தகைய குணங்களை காண முடியும்.

இதில், டெக்னிக்கலாக அதிகம் எழுதப் போவதில்லை. அவரது செஸ் வாழ்க்கையின் அருமை பெருமைகள் பற்றி கொஞ்சம் பேசுவோம். 12 பிரதம ஆட்டங்களில், புள்ளிகள் சமனாக இருந்த நிலையில் நேற்று நடந்து முடிந்த 4 ஆட்டங்கள் கொண்ட துரித ஆட்டத் தொடரை ஆனந்த் 2.5-1.5 என்ற புள்ளி எண்ணிக்கையில் வென்றார். திருமணத்திற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் மகன் பிறந்ததால் அடைந்த மகிழ்ச்சிக்கு இணையான ஒன்றை இந்த ஐந்தாவது செஸ் உலகப் பட்டம் ஆனந்துக்கு அளித்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

2வது ஆட்டத்தில் வென்று, மற்ற 3 ஆட்டங்களையும் சுலபமாக டிரா செய்தார் ஆனந்த். இந்த நான்கு 20 நிமிட ஆட்டங்களிலும், கெல்ஃபாண்ட் நேரக்குறைவினால் ரொம்ப சிரமப்பட்டார். துரித ஆட்டத்தில் முடிசூடா மன்னராக விளங்கும் ஆனந்துக்கு அந்தப் பிரச்சினையே இல்லை. 2வது ஆட்டத்தில், நேரக் குறைவு தந்த அழுத்தத்தினால், சில சந்தேகத்துக்குரிய தேர்வுகள் செய்யும் கட்டாயத்துக்கு கெல்ஃபாண்ட் ஆளானார். ஆனாலும், ஒரு மகாபாரதப் போராட்டத்துக்குப் பின் தான், தனது பிஷப்பை ஒரு ஃபோர்க்கில் குதிரைக்கு ஈடாக இழந்த பின், வேறு வழியின்றி 77வது நகர்த்தலில் கெல்ஃபாண்ட் ரிசைன் செய்தார்.

http://www.dnaindia.com/sport/commentary_as-it-happened-wcc-2012-anand-takes-lead-in-tie-break-2_1695793

அது போலவே, நேரக் குறைவு தந்த அழுத்தத்தினாலேயே, 3வது ஆட்டத்தில் முன்னணியில்இருந்தும், கெல்ஃபாண்டால் அதை வெற்றியாக மாற்ற இயலவில்லை அல்லது நமது ஸ்பீட் கிங் அதை அனுமதிக்கவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். 3வது மற்றும் 4வது ஆட்டங்களில் ஆனந்தின் (நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளாத) சுறுசுறுப்பான தற்காப்பு நகர்த்தல்கள் அபாரம் என்று கூறுவேன்.

Speaking about the tie break, the champion said, "I wouldn’t say there is some kind of justice in it. After we played 12-games, I dont think the tiebreak is a reasonable situation that would separate us after a very tough match. Things really went my way in the tiebreaker, I can say I won because I won", Anand said matter-of-factly. ஆனந்த் இப்படிக் கூறியிருப்பது அவரது தன்னடகத்தையும், யதார்த்த அணுகுமுறையையும் காட்டுகிறது.

செஸ் வரலாற்றில், மூன்று வகையான ஆட்ட முறைகளில் (நாக் அவுட், மேட்ச், டோர்னமண்ட்) உலக சேம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஒருவர் விஷி ஆனந்த் மட்டுமே. நாக் அவுட் முறையில், டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போல, ஒவ்வொரு சுற்றிலும், தோற்றவர் வெளியேற்றப்படுவார். கால் இறுதி, அரை இறுதி, இறுதிச் சுற்றுகள் நடந்து வெற்றி பெற்றவர் சேம்பியன் என அறிவிக்கப்படுவார். 2000-ஆம் ஆண்டு, அலெக்ஸி ஷிராவை நாக் அவுட் முறையில், இறுதிச்சுற்றில் வென்று முதன் முதலாக உலக சேம்பியன் ஆனார்.
6 ஆட்டங்கள் இருந்தும், ஆனந்துக்கு நான்கே ஆட்டங்கள் தான் தேவைப்பட்டன. 3.5-0.5

2007-இல் கிராம்னிக் உலக சேம்பியனாக இருந்தபோது மெக்ஸிகோவில் நடந்த (உலகின் அப்போதைய 8 சிறந்த ஆட்டக்காரர்கள் பங்கு பெற்ற, 14 சுற்றுகள் கொண்ட) டோர்னமண்ட் முறை உலக செஸ் சேம்பியன்ஷிப்பில், 9 புள்ளிகள் எடுத்து முதலாவதாக வந்ததன் மூலம் ஆனந்த் 2வது முறை உலக சேம்பியன் ஆனார். இதில், ஒரு தோல்வியைக் கூட ஆனந்த் சந்திக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.
http://en.wikipedia.org/wiki/World_Chess_Championship_2007
அடுத்த ஆண்டில், மேட்ச் ஆட்ட முறையில், கிராம்னிக்கை 6.5-4.5 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து (3வது) பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.

2010-இல், டோபோலோவ் என்ற சிங்கத்தை அதன் குகையிலேயே (சோஃபியா, பல்கேரியா) வீழ்த்தி பட்டத்தை 4வது முறை வென்றது, ஆனந்தின் செஸ் வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய சாதனை. கிராம்னிக் போல் அல்லாமல், டோபோலோவ், ரிஸ்க் எடுத்து அக்ரெஸ்ஸிவ்வாக விளையாடுபவர். புள்ளிகள் சமனாக (5.5-5.5) இருந்த நிலையில், 12வது இறுதி ஆட்டத்தில் கறுப்புக் காய்களுடன் ஆடிய ஆனந்த், டோபோலோவுக்கு கொடுத்த சைக்காலாஜிகல் அடி காரணமாக, இப்போது உலகத் தர வரிசையில் 12வது இடத்தில் டோபோலோவ் இருக்கிறார். இந்த 12வது ஆட்டமும், ஆனந்தின் வெற்றியின் நேர்த்தியும் மிகவும் பேசப்பட்டவை.

இந்தியாவின் முதல் உலக ஜூனியர் செஸ் சேம்பியன், முதல் கிராண்ட் மாஸ்டர், முதல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர், துரித ஆட்டம், காய்களை பார்க்காமல் ஆட்டம், மொத்தப் புள்ளிகள் என்ற 3 வகைகளிலும் உலகப் பிரசத்தி பெற்ற ஏம்பர் செஸ் டோர்னமண்ட் பட்டத்தை தனியொருவராக வென்ற முதல் செஸ் ஆட்டக்காரர் என்று பல முதல்கள் ஆனந்தின் செஸ் வாழ்க்கையில் விரவி இருக்கின்றன. அதோடு, இந்தியாவின் ஒரே உலக செஸ் சேம்பியன், கோரஸ் டோர்னமண்ட் பட்டத்தை 5 முறை வென்ற ஒரே மனிதர், மைன்ஸ் செஸ் பட்டத்தை 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்ற ஒரே ஆட்டக்காரர் என்று நாம் பிரமிக்கத்தக்க “ஒரே” ஒருவர் ஆனந்த் மட்டுமே. ஆனந்த் செஸ் ஆஸ்கார் பட்டத்தை 6 முறை வென்றுள்ளார்.

இந்தியாவின் இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூஷனையும் ஆனந்த் பெற்றிருக்கும் நிலையில், ஒரு விளையாட்டு வீரருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமெனில், அதற்கு ஆனந்த் ஒருவரே மிக்க தகுதி படைத்தவர் என்று தாராளமாக சொல்ல முடியும்.


எ.அ.பாலா

உலக சேம்பியன்ஷிப் செஸ் - ஆனந்த் vs கெல்ஃபாண்ட்

உலக சேம்பியன்ஷிப் செஸ் - ஆனந்த் vs கெல்ஃபாண்ட்
இது இட்லிவடை வலிப்பதிவுக்காக எழுதியது.  இதை வைத்து பரிசுப்போட்டி எல்லாம் இ.வ அறிவித்திருந்தது என் வலையுலக வாழ்க்கையின் ஹைலைட் ;-)  மற்ற விவரங்கள் இ.வ வலைப்பதிவில் காணலாம்.  




இட்லிவடை வாசகர்களில் செஸ் ஆர்வலர்களுக்கு மட்டுமாவது, இந்த ஐபிஎல் கிரிக்கெட் பெருவிழாவுக்கு நடுவே, தற்சமயம் உலக செஸ் சேம்பியன்ஷிப் நடந்து வருவது நிச்சயம் தெரிந்திருக்கும். 10 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், உலக சேம்பியன் விஷி ஆனந்தும், அவரை எதிர்த்தாடும் போரிஸ் கெல்ஃபாண்டும் சமநிலையில் (5-5) இருக்கிறார்கள். 12 ஆட்டங்கள் முடிவில், புள்ளிகள் சமநிலையில் இருக்குமானால், 4 துரித ஆட்டங்கள் நடைபெறும். அதில் சமன் எனில், 2 அதிவேக ஆட்டங்கள், சமன் எனில், இது போல 4 முறை (4 X 2) தொடரும், சமன் எனில், போதும் விட்டு விடுவோம் :-) இப்போது 7,8,9,10-வது ஆட்டங்கள் பற்றி பார்க்கலாமா?

எ.அ.பாலாவின் ஐபிஎல் கிரிக்கெட் இடுகைகளுக்கு இடையே, நான் செஸ் குறித்து டெக்னிக்கலாக எழுதினால் எடுபடுமா என்று ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆனால், 2010 உலக சேம்பியஷிப் சமயத்தில், லலிதா ராம் அவர்களின் செஸ் இடுகைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததை கவனித்தேன்! அந்த காரணத்தால் ஒரு கட்டுரை எழுதிப்பார்ப்போமே என்றொரு உந்துதல் பிறந்தது.முதல் 6 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன. அதில் 3வது Neo-Grulfeld ஆட்டத்தில், வெள்ளைக் காய்களுடன் விளையாடிய ஆனந்துக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. 30 நகர்த்தல்கள் வரை முன்னணியில் தான் இருந்தார்; d6-ல் அவரது ஒரு passed pawn முடிவாட்டத்தில் கெல்ஃபாண்டுக்கு பிரச்சினை தரும் வகையில் அமர்ந்திருந்தது. நேரமின்மை காரணமாக ஆனந்தின் பலமில்லாத 35வது நகர்த்தலால் (Rh1), ஆனந்திடம் ஒரு pawn அதிகமிருந்தும், ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆட்டத்தை இங்கே ஆடிப் பார்க்கலாம்!

http://www.chessgames.com/perl/chessgame?gid=1665818

7வது ஆட்டம்: http://www.chessgames.com/perl/chessgame?gid=1666550

இதில் ஆனந்துக்கு கறுப்புக்காய்கள். செமி-ஸ்லாவ் தற்காப்பை ஆனந்த் கையாண்டார். 11-வது நகர்த்தலின் முடிவில், கெல்ஃபாண்ட் C-file-ஐ தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றது போலத் தோன்றியது. ஆனந்தின் 15வது நகர்த்தல் (Qb8), கெல்ஃபாண்டின் C-file ஆதிக்கத்தை கலைக்க மேற்கொண்ட முடிவு என்பது அடுத்து கருப்பு யானை C8க்கு வந்தவுடன் புரிந்தது. 20 நகர்த்தல்களுக்குப் பின், வெள்ளைக் காய்கள் தாக்குதலை தொடங்க சாதகமாகவே பொஸிஷன் இருந்தது. ஆனந்தின் காய்கள் ராணியின் தரப்பு (Queenside) குவிந்திருந்த போதிலும், இதுவரை அவர் செய்த தற்காப்பு நகர்த்தல்களை பலமற்றவை என்று கூறமுடியாது.

ஆனந்தின் 21வது நகர்த்தல் Ne4 பலகீனமானது என்று சொல்ல செஸ் கிராண்ட் மாஸ்டர் தேவையில்லை. அவரது வீழ்ச்சிக்கு அடி கோலிய நகர்த்தலது! உடனே, கெல்ஃபாண்ட் தனது யானையையும், ராணியையும் ஆனந்துடன் எக்ஸ்சேஞ்ச் செய்து கொண்டதில் அவரது பொஸிஷன் மேலும் வலுவடைந்தது. தொடர்ந்து பலகீனமான சந்தேகத்துக்குரிய நகர்த்தல்களால், தனது பொஸிஷனை மேலும் மோசமாக்கிக் கொண்ட ஆனந்த் ஒரு உலக சேம்பியன் போல விளையாடவில்லை என்பது வருத்தமாக விஷயம். C8-ல் இருந்த ஆனந்தின் வெள்ளை பிஷப், தனக்கும் ஆட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல பரிதாபமாக காட்சியளித்தது. கெல்ஃபாண்ட் கொடுத்த தொடர் அழுத்தத்தினால், அந்த பிஷப்பை 35வது நகர்த்தலில் ஆனந்த் இழந்தார்.

கெல்ஃபாண்ட் தனது யானை, 2 குதிரைகளைக் கொண்டு ஆனந்தின் ராஜாவுக்கு மேட்டிங் வலையை அழகாக விரித்தார். கடைசி முயற்சியாக, e- pawn-ஐ ராணியாக்க ஆனந்த் வகுத்த அதிரடி திட்டத்திற்கு கெல்ஃபாண்ட் அசரவில்லை. 38வது நகர்த்தலில், ஆனந்த் “38. ... e1=Q 39. Ng6+ Kg8 40. Rg7#!” காரணத்தினால் ரிசைன் செய்தார்.

8வது ஆட்டம்: http://www.chessgames.com/perl/chessgame?gid=1666558

உலக சேம்பியன்ஷிப் ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மோசமாக விளையாடி தோற்கும்போது உண்டாகும் சைக்காலிஜிகல் அழுத்தம் காரணமாக, அடுத்த ஆட்டத்தில் பாதுகாப்பான ஆட்டத்தை தேர்வு செய்யும் மனநிலைக்கு ஒருவர் ஆளாவது சகஜமே. ஆனால், ஆனந்தின் முந்தைய பல உலக சேம்பியன்ஷிப் அனுபவமும், அவரது அசாத்திய tactical ஆட்டத்திறமையும் இந்த முக்கியமான ஆட்டத்தில் அவருக்கு பெரிதும் உதவின.

ஆனந்துக்கு வெள்ளைக்காய்கள். இதுவும் ஒரு d4 தொடக்கம், நியோ கிரன்ஃபல்ட் தற்காப்பு வகையில், ஆனந்த் சற்றே அக்ரஸிவ்வான f3 நகர்த்தல் வாயிலாக ஃப்ளோர்-ஆலிகைன் தொடர்ச்சியைத் தேர்ந்தெடுத்தார். இவ்வாட்டத்தில் வெற்றி அவசியம் என்பதால், ஆனந்த் ரிஸ்க் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். 7வது நகர்த்தலில் ஆனந்தின் ராஜா தரப்பு குதிரை (ராணி தரப்பு குதிரை நேரடியாக செல்லும் வாய்ப்பிருந்த) c3-க்கு சென்றது சற்று ஆச்சரித்தை அளித்தது.

கெல்ஃபாண்ட் ராஜா தரப்பு castling செய்தார். ஆனந்தின் 12வது நகர்த்தல் g4-ஐ பார்த்தவுடன், ஆனந்த் தாக்குதலுக்காக castling-ஐ புறக்கணித்து விட்டது புரிந்தது. 14வது நகர்த்தலில், கெல்ஃபாண்ட் தனது குதிரையை g7 அல்லது f6க்கு எடுத்துச் சென்று அமைதியாக ஆட்டத்தை தொடர்ந்திருக்கலாம். ஆனால் அவர் பொஸிஷன் (14...Nf6 15.Kc2 Na6 16.Rd1 or 14...Ng7 15.h4) மேலும் பலமிழந்து போயிருக்கும்,

தானும் தாக்குதலில் இறங்க முடிவு செய்த கெல்ஃபாண்ட், ஆனந்தின் ராஜாவுக்கு செக் கொடுத்து, f3 ஃபோர்க் வாயிலாக அவரது யானையை வெட்டும் நோக்கத்துடன் 14.Qf6 நகர்த்தலை தேர்ந்தெடுத்தார். ஆனால், உலக சேம்பியன்ஷிப் ஆட்டத்தில், Attack is the best form of defense என்பது சில சமயங்களில் மட்டுமே கை கொடுக்கும். ஆனந்த் இதை துல்லியமாக எதிர்பார்த்தவர் போல, 15.gxNh5 நகர்த்தலை அதிகம் யோசிக்காமல் செய்தார். 15.... Qxf3+ 16.Kc2 Qxh1 தொடர்ந்தன. ஆனந்த் தனது யானையை மனமுவந்து தாரை வார்த்தார் என்று தான் கூற வேண்டும். ஏன்?

ஆனந்தின் 17. Qf2-க்கு பிறகு தான் தனது ராணி ஆனந்த் விரித்த trap வலையில் மாட்டி விட்டது கெல்ஃபாண்டுக்கு உறைத்தது. கெல்ஃபாண்ட் 17 ... Nc6 ஆடி மேலும் ஒரு குதிரையை இழந்து ராணியை காப்பாற்றி, மோசமான பொஸிஷனில் ஆட்டத்தை தொடர்ந்திருக்கலாம். ஆனந்த் போன்ற ஒரு விற்பன்னரிடம் அதில் பயனெதுவும் இல்லை என்றுணர்ந்து உடனடியாக ரிசைன் செய்தார். கெல்ஃபாண்டின் பிளண்டர் காரணமாகத் தான் அவர் தோற்றார் என்றாலும், இவ்வாட்டத்தில் ஆனந்தின் ஒவ்வொரு நகர்த்தலும், துல்லியமான, நம்பிக்கையான நகர்த்தல். சமீப காலத்தில் உலக சேம்பியன்ஷிப் ஆட்டங்களில் மிகக் குறைந்த நகர்த்தல்களில் முடிவடைந்த ஆட்டம் இது என்று கூறுகிறார்கள்.

9வது ஆட்டம்: http://www.chessgames.com/perl/chessgame?gid=1667306

இவ்வாட்டம் டிராவில் தான் முடிந்தது என்றாலும், கெல்ஃபாண்டின் தாக்குதலை தனது தற்காப்பு நகர்த்தல்களால் திறமையாக சமாளித்த ஆனந்தை நிச்சயம் பாராட்ட வேண்டும். அதுவும், பல நகர்த்தல்களுக்கு முன்பே, ஆட்டம் செல்லக்கூடிய சாத்தியங்களை நுணுக்கமாக ஆராய்ந்து, தனது ராணியை 20. Rxc5 நகர்த்தலுக்குப் பின் கெல்ஃபாண்டின் யானை, பிஷப்புக்கு தியாகம் செய்யத் துணிந்ததில், அவரது மன உறுதி பளிச்சிட்டது.

முடிவாட்டத்தில், கெல்ஃபாண்டின் ராணிக்கு எதிராக ஆனந்திடம் ஒரு யானையும், ஒரு குதிரையும் இருந்தன. இம்மாதிரி சூழ்நிலையில், Zugzwang ஏற்படாத வகையில் ஆடுவதற்கு அதிக திறமை வேண்டும். கெல்ஃபாண்ட் வெற்றி பெற மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் ஆனந்த் முறியடித்ததில், ஆட்டம் 49வது நகர்த்தலில் டிராவில் முடிவடைந்தது.

10வது ஆட்டம்:
http://www.chessgames.com/perl/chessgame?gid=1667320

இவ்வாட்டத்தில் ஆனந்துக்கு வெள்ளை என்பதால், ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. சற்றே வித்தியாசமான king pawn (e4) தொடக்கம்; சிசேலியன் தற்காப்பு (ரோஸலிமோ தொடர்ச்சி) வகைப்பட்டது. 5வது நகர்த்தலில் (e5) கெல்ஃபாண்ட் தனது pawn ஐ தியாகம் செய்ய முடிவு செய்தார். அவர் d6 ஆடியிருந்தால், அவரது கருப்பு ராணி trap செய்யப்படும் அபாயம் ஒன்று ஒளிந்திருந்தது !!! ...5...d6 6.e5 6...dxe5 7.Nxe5 Qd4 8.Nc4 Qxa1 9.Nc3.

pawn-களின் அரண் இல்லாத ராணியின் தரப்பு தைரியமாக castling செய்து கெல்ஃபாண்ட் ஆச்சரியப்படுத்தினார், இந்த சூழலில், ஆனந்த் மிகச் சிறிய அளவில் முன்னணியில் இருந்தார் என்று தான் கூற வேண்டும், ஆனந்தின் c5 pawn மீதான தாக்குதலை கெல்ஃபாண்ட் சமாளித்தது அருமை. 8வது ஆட்டத்தின் தோல்வியை மனதில் வைத்து, கெல்ஃபாண்ட் இவ்வாட்டத்தில் மிகச் சரியான தற்காப்பு நகர்த்தல்களை ஆச்சரியமளிக்கும் வகையில் மேற்கொண்டார். 25வது நகர்த்தலில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஆனந்த் 18வது நகர்த்தலில் Re5 ஆடியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. தொடர்ச்சியாக ஆட்டம் சிக்கலான பொஸிஷனுக்கு போயிருக்கும் என்பது தவிர, ஆனந்துக்கு நிச்சயமான பெரிய அட்வாண்டேஜ் கிடைத்திருக்கும் என்று ஆராய்ந்து கூறுவது என் செஸ் அறிவுக்கு அப்பாறப்ட்டது. ஆனாலும், இன்னும் இரண்டே ஆட்டங்கள் இருக்கும் நிலையில், இந்த டிரா எனக்கு வருத்தத்தையே அளித்தது.

எ,அ.பாலா


Monday, August 23, 2010

565. ஒரு சந்தோஷமும், ஒரு துக்கமும்!

கௌசல்யா: நேற்று கௌசல்யாவையும் பானுபிரியாவையும் வீட்டிற்கு அழைத்திருந்தேன். எப்போதும் போல, கௌசல்யாவை நேரில் சந்திக்கும்போதெல்லாம் பெய்யும் மழை, நேற்றும் விடவில்லை!

பானுபிரியா திருவண்ணாமலை அரசுக் கல்லூரியில் பொறியியல் (நுண்ணணுவியல்) முதலாண்டு முடித்து விட்டார். நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். நானிட்ட வேண்டுகோள் இடுகையை வாசித்து பெரிய அளவில் ஆதரவு தந்த நல்ல உள்ளங்களுக்கு மீண்டும் நன்றிகள்.

கௌசல்யா தற்போது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் ஹவுஸ் சர்ஜன்சி பயின்று வருகிறார். இன்னும் சில மாதங்களில் முழு வைத்தியர் ஆகி விடுவார்! இந்த 5 ஆண்டு கல்லூரி/விடுதி வாழ்க்கையில் தன்னம்பிக்கையும், கலகலப்பும், தைரியமும் கூடி இருப்பது கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது. மருத்துவத்தில் மேல்நிலைக் கல்வி பயிலப் போவதாகக் கூறினார். முடிந்த உதவி செய்வதாக கூறியிருக்கிறேன்.

மற்றொரு முக்கியமான விஷயம். கௌசல்யாவுக்கு இப்போது மாதம் 7000 ரூ அரசு உதவித் தொகை (stipend) கிட்டுவதால், தன் செலவை தானே பார்த்துக் கொள்ள முடிவதாகக் கூறினார். அதோடு, தனது முதல் மாத உதவித் தொகையிலிருந்து, என்னை மிகவும் வற்புறுத்தி, எங்களது கல்வி உதவிச் சேவைக்கு தனது பங்காக ரூ 2500-ஐ வழங்கிய செயல் மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது! கௌசல்யா டாக்டர் ஆனதை விட, இப்படி நல்ல மனுஷியாக பரிமளிப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது! அவரது கல்விக்கு உதவிய / அவளை வாழ்த்திய நல்ல நண்பர்களுக்கு மீண்டும் எனது நன்றிகள்.
*******************************

அந்தோணி முத்து: இன்று காலை, என்னை சகோதரனாக பாவித்த, எனது இனிய நண்பர் அந்தோணி முத்துவின் திடீர் மறைவு என்னை உலுக்கி விட்டது! அவர் கடந்த ஒரு வாரமாக ஆஸ்துமா பிரச்சினையால் மருத்துவமனையில் இருந்தாலும், முன்பு ஒரு முறை சுகமடைந்து வீடு திரும்பியது போல, இப்போதும் உடல் நலம் தேறி வீடு திரும்பி விடுவார் என்று தான் எண்ணியிருந்தேன்.

இம்முறை வீடு திரும்பவில்லை :-( நாமொன்று நினைக்க, தெய்வமொன்று நினைக்கிறது! தான் ஒரு மாற்றுத் திறனாளி என்பதை அடுத்தவர் உணராத வண்ணம் இயல்பாக நடந்து கொள்பவர் அந்தோணி! அதனால், அவருடன் சகஜமாக உரையாட முடிந்தது.

25 ஆண்டுகளுக்கு மேல் சக்கர நாற்காலியிலும், படுக்கையிலும் தன் வாழ்க்கையை செலவழித்தவரிடம், சில சமயங்களில், என் (காலணா பெறாத!) உடல் நலப் பிரச்சினைகளைக் கூட இயல்பாக பேச முடிந்ததை இப்போது எண்ணிப் பார்க்கையில் மனது கனக்கிறது!

ஒரு இரண்டரை ஆண்டுகளாகத் தான் எனக்கு அந்தோணியைத் தெரியும். இந்த குறுகிய காலத்தில் தனது தன்னம்பிக்கை, விடா முயற்சி, மனஉறுதி, யாரிடமும் உதவி கோரத் தயங்கும் இயல்பு, வெப் டிசைன் விஷயங்களை கற்பதில் காட்டிய உற்சாக ஆர்வம், நன்றி பாராட்டும் குணம் போன்றவற்றால் என்னை ஆச்சரியப்படுத்திய, ஏன் எடுத்துக்காட்டாகக் கூட இருந்த ஓர் அசாதாரணமான நண்பராக இருந்தார்! அந்தோணி முத்துவின் நட்பு எனக்கு பல நேர்மறை விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறது!

அந்தோணியின் ஆன்மா சாந்தியடைய அந்த வைகுண்ட நாதனை வேண்டிக் கொள்கிறேன்!

எ.அ.பாலா

Thursday, March 04, 2010

555. கல்கியில் நண்பர் பாசிடிவ் அந்தோணியின் கட்டுரை

எனது அந்தோணிக்கு உதவி வேண்டி என்ற இடுகையின் வாயிலாக அந்தோணியுடனான நட்பு தொடங்கியது. அசாத்தியமான தன்னம்பிக்கையும், தன் உழைப்பில் சம்பாதித்து வாழ வேண்டும் என்ற திடமான எண்ணமும் மிக்கவர் என்பதை முதல் சந்திப்பிலேயே புரிந்து கொள்ள முடிந்தது. மனச் சோர்வான சில சமயங்களில், அவருடன் பேசி மனத்தெளிவடைந்திருக்கிறேன். அந்தோணி தொடர்பான என் இடுகைகள் கீழே:

http://balaji_ammu.blogspot.com/2008/08/452.html

http://balaji_ammu.blogspot.com/2008/04/431.html

சமீபத்திய கல்கி சுயமுன்னேற்றச் சிறப்பிதழில் (07.03.2010) அந்தோணியின் கட்டுரை வெளிவந்திருக்கிறது. அதை ஸ்கேன் செய்து இட்டிருக்கிறேன். கிளிக் செய்து பெரிதாக்கி வாசிக்கவும்.

இலக்குகள் பற்றி அந்தோணியைக் கேட்டால்,
"தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் இவற்றில் அடிப்படையிலான துறையில் சுயபரிசோதனைகளை சகமானுடத்துடன் பகிர வேண்டும். கேட்பவர்களுக்கெல்லாம் இல்லை என்று சொல்லாது கொடுக்கும் நிலைக்கு உயர வேண்டும்" என்கிறார்.
என்ன ஒரு உயர்வான சிந்தனை! வாழ்க!



அன்புடன்
பாலா

Saturday, February 28, 2009

சுஜாதா - ஆண்டு 1 - அரங்கன் நலமா?


எனக்கும் வாத்தியாருக்கும் என்ன உறவு என்று நினைக்கும்போது, தேசிகன் சொல்வது போல் "நமக்கிங்கு உறவேல் ஒழிக்க ஒழியாது" என்றெல்லாம் கூற முடியாது. பரிச்சயம் அத்தனையும் அவரது எழுத்துக்களுடன் மட்டுமே. அம்பலம் சாட்டில் ஒரே ஒரு முறை பேசியிருக்கிறேன்.

அவரை எப்போது வாசிக்க ஆரம்பித்தேன் என்று கரெக்டாக சொல்ல முடியவில்லை. ஆனால், ஆரம்பித்தது கணேஷ்-வசந்த கதைகளிலிருந்து. அப்பருவத்தில், ஒரு பிரச்சினையை அணுகும் கணேஷின் திறமையும், வசந்த்தின் சுட்டித்தனமும், ஜொள்ளும் உடனடியாக ஒரு ஈர்ப்பை உண்டு பண்ணியது. கமல், ரஜினி என்று நடிகர்களுக்கு, அவர்கள் படங்களைப் பார்த்து தீவிர ரசிகர்கள் அமைகிறார்கள். ஆனால், சுஜாதா ஆணா/பெண்ணா என்று கூடத் தெரியாமல், அவரது தனித்துவமான எழுத்து என்ற அடையாளத்தின் பேரில் மட்டும், தீவிர ரசிகராகி, அவரை வாத்தியாராக ஏற்றுக் கொண்ட அக்கால இளைஞர் அனேகர். அடியேனும் அந்த கூட்டத்தில் ஒருவன்.

"பிரிவோம் சந்திப்போம்" ஏற்படுத்திய தாக்கத்தில், பல ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கவிருக்கும் மகளுக்கு மதுமிதா என்று பெயரிட்டேன் :)

அந்த subtle (உறுத்தாத) ஹியூமர் அவர் எழுத்துகளில் (அது கதையோ/கட்டுரையோ) விரவி இருக்கும். Non technical ஆசாமிகளுக்குக் கூட புரியும்படியாக, அதே சமயம் சுவாரசியமாக நவீன டெக்னிகல் சமாச்சாரங்களைக் கூட, ஒரு கதை சொல்வது போல சொல்ல ஒரு ஆள் பிறந்து வர, பலப்பல ஆண்டுகள் ஆகலாம்.

இங்கு தமிழ் எழுத்தாளர்களுக்கு பஞ்சமில்லை. அது போல, டெக்னிகல் ஆட்களுக்கும் பஞ்சமில்லை. வாத்தியார் போல எஞ்சினிய்ராக, விரிந்த வாசிப்போடு, ஆங்கிலம்/தமிழ் என்று இரண்டிலும் மிக்க புலமையோடு, மிக்க தன்னடகத்துடன் ஒரு ஆசாமி சல்லடை போட்டுத் தேடினாலும் கிடைக்கப் போவதில்லை :(

இந்த வருட புத்தக கண்காட்சியில், உயிர்மையில் அவரது "கண்ணீரில்லாமல்" என்ற சிறு கட்டுரைத் தொகுப்பை வாங்கினேன். என்ன அது "கண்ணிரீல்லாமல்" என்று பார்த்தால், வாத்தியார் யாப்பு, கர்னாடக/மேற்கித்திய சங்கீதம், ஐன்ஸ்டைன், இந்து மதம் ஆகிய சமாச்சாரங்களை நாம் ரொம்பவும் அழாமல் தன்னிடமிருந்து தெரிந்து கொள்ள அழைக்கிறார் என்று விளங்கியது :) நிஜமாகவே, யாப்பிலக்கணத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது, ஒரே வாசிப்பில், மனதில் நிற்கும் வண்ணம்!

அதான் வாத்தியார் எழுத்தின் சக்தி. யாப்பு சொல்லித் தரும்போது கூட அந்த நகைச்சுவை இருக்கிறதே, "தமிழ் பண்டிதர்களிடம் போகாதீர்கள். "எட்டடி தரவு கொச்சக் கலிப்பா" போன்ற சொற்கள் எல்லாம் கனவில் வந்து பயமுறுத்தும்" என்பார்! யாப்பு பற்றி இதை விட எளிமையாக யாரும் விளக்க முடியாது.

அது போல, 'ரத்தம் ஒரே நிறம்' நாவலில், முத்து என்ற நாவலின் கதாநாயகனுக்கும், மெக்கன்ஸி என்ற பரங்கியனுக்கும் நடக்கும் "கட்டிப்புடி" சண்டையை வர்ணிக்கும்போது, 'முத்து மேல் மெக்கன்ஸி.. மெக்கன்ஸி மேல் முத்து... நிலைமை சற்று குழப்பமாக இப்போது முத்துன்ஸியாக உருண்டார்கள்' என்பார் :)

இரண்டு பதிவுகளில் வாத்தியாரை "இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்று வாழ்த்தியிருக்கிறேன், அதாவது 200 ஆண்டுகள். சொல்லி 3 ஆண்டுகளுக்குள் அரங்கனைப் பார்க்க புறப்பட்டுப் போய் விட்டார். இல்லை, அவருக்கு மிகவும் பிடித்த திருமங்கையாழ்வாராகக் கூட இருக்கலாம்!

வாத்தியாரின் மறைவுக்குப் பிறகு வலைப்பதிவர்கள் எழுதிய அஞ்சலிப் பதிவுகளின் இணைப்புகள் இந்த எனது பதிவில் உள்ளன

சுஜாதா தன்னைப் பற்றி: என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக்குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!

Saturday, January 31, 2009

518. உன்னதமானதொரு மகா கலைஞன் நாகேஷுக்கு அஞ்சலி

நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்த நடிகர் நாகேஷ் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது (75).

சில நாட்களாகவே அவருக்கு உடல் நலக் கோளாறு இருந்து வந்தது. இரு மாதங்களுக்கு முன் அவருக்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.


நன்றி: தட்ஸ்டாமில்.காம்

டெயில் பீஸ்: நாகேஷ் போன்று நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டிய சாதனையாளர்களுக்கு பத்மஸ்ரீ வழங்காமல், நேற்றைய மழையில் முளைத்த காளான்களுக்கெல்லாம் (எ.கா: விவேக்) விருது வழங்கப்படுவதற்கும் அவர்கள் பரிந்துரைக்கப்படுவதற்கும், அரசியல் காரணங்கள் தாம் காரணம். வருத்தமளிக்கும் விசயம் இது.

இது குறித்து எனது சமீபத்திய இடுகை ஒன்றில் கூட எழுதியிருந்தேன்

அந்த மகா நடிகனின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்!

எ.அ.பாலா

பிற்சேர்க்கை:

சென்னை, ஜன. 31: தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் மிகச்சிறந்த நடிகராக கருதப்படும் நாகேஷ் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் நாகேஷ் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு ஆகிய நகைச்சுவை மன்னர்களை அடுத்து தமிழ் திரைவுலகில் 25 ஆண்டு களுக்கு மேலாக தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நாகேஷ்.

ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவர், தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் பரிமளித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் வழுக்கி விழுந்ததால் நாகேசுக்கு தலையில் அடிபட்டது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அவருக்கு ரத்தக்கசிவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறலும் இருந்து வந்ததாக தெரிகிறது.

நேற்றிரவு மூச்சுத்திணறல் அதிகரித்து மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவர் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித் ததை அடுத்து அவர் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டார். இன்று காலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவர்கள் வருவதற்குள் காலை 11.20 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. நாகேசுக்கு நடிகர் ஆனந்த்பாபு, டேவிட் என்கிற 2 மகன்கள் உள்ளனர்.

நாகேஷின் உடல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் சார்பில் நாகேஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டுள்ளது. சூப்பர் ரஜினிகாந்த், கமலஹாசன், சோ, மனோரமா உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாழ்க்கை குறிப்பு

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ் என்பதாகும். தந்தை கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். கிருஷ்ணாராவ் ரெயில்வேயில் வேலை பார்த்து வந்தார். தமிழ்நாட்டுக்கு வந்த அவர்கள், தாராபுரத்தில் தங்கியிருந்தனர். 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ந் தேதி பிறந்த நாகேஷ், தாராபுரத்தில் தனது இளமை பருவத்தை கழித்தார். பல இடங்களில் வேலை பார்த்த அவர், கடைசியாக ரெயில்வேயில் குமாஸ்தாவாக சென்னையில் பணி யாற்றினார்.

சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுகொண்ட நாகேஷ்,அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். ஒரு நாடகத்தில் வயிற்றுவலி காரணமாக அவர் நடித்ததை பார்த்து எம்ஜிஆர் வெகுவாக பாராட்டினார்.

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நாகேஷ், தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.

அதன் பிறகு பல படங்களில் நகைச்சுவை நடிகராக வேடந்தாங்கி சிறப்பாக நடித்தார். அவருக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார். இந்த ஜோடி இல்லாத படமே ஒருகாலத்தில் இல்லை என்ற நிலை நிலவியது.

கே. பாலசந்தர் கதைவசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து குணச்சித்ர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.

திருவிளையாடல் படத்தில் சிவாஜியுடன், புலவர் தருமியாக நடித்த நாகேசுக்கு அந்த படத்தில் பெரும் புகழ் கிட்டியது. காதலிக்க நேரமில்லை, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்களில் நாகேஷின் நடிப்பு அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.

தேன்கிண்ணம், நவக்கிரஹம், எதிர்நீச்சல், நீர்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் அவர் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

நடிகர் வீரப்பனுடன் சேர்ந்து பணத்தோட்டம் படத்தில் அவர் அடிக்கும் லூட்டிகளை பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகாதவர்கள் இல்லை என்று கூறலாம். கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்பட பல படங்களில் அவரது நகைச்சுவை நடிப்பு பிரகாசித்தது.

கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள நாகேஷ் நடித்த கடைசி படம் தசாவதாரம் ஆகும்.

நாகேஷின் இழப்பு திரையுலகில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. முதல்வர் இரங்கல் நாகேஷின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். கலைத்துறையில் புகழ் பெற்ற சிறந்த குணச்சித்திர நடிகரான நாகேஷ் இன்றைய தினம் இயற்கை அடைந்த செய்தியினை அறிந்து பெருந்துயருற்றேன்.

தனிச்சிறப்பான நகைச்சுவையாலும், பல திறப்பட்ட நடிப்பாற்றலாலும் தமிழகத் திரைப்பட வரலாற்றில் தனக்காக ஒரு தனி இடத்தைப் பெற்றவர் அருமை நண்பர் நாகேஷ். தனிப்பட்ட முறையில் என்னிடம் மாறாத அன்பும், பாசமும் கொண்டவர். தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் பேராதரவையும் மதிப்பையும் பெற்றவர்.

நாகேஷின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி: மாலைச்சுடர்.காம்

************************************
Nagesh is no more

For once, the description 'death has the last laugh' would be temptingly appropriate. For death today laid its icy hands on the greatest comedian of Tamil (perhaps even Indian) cinema, Nagesh.

And his demise must have been his eventual way of humouring death itself. But, for all we know, even death would have spilled a few tears after snatching away the smiles of an entire State.

His end came after a longish bout of ill-health He was 76, and is survived by three sons (Anand Babu, Ramesh Babu and Rajesh Babu) and five grandchildren. His wife had pre-deceased him.

Nagesh had developed some complications in his legs some six months back. After treatment, his movements were restricted.

According to family sources, he had a fall in his house a few days ago and the wound had to be stitched upon. This morning he suddenly swooned and fell down. He was rushed to a private hospital in Thiruvanmiyur where he was declared dead on arrival.

His body is kept at his St Mary's Road residence and his final rites are scheduled for tomorrow at the Besant Nagar crematorium.

Fans and big names from the film industry have started pouring in to pay their last respects in the form of sobs and tears to a man who had so far elicited only the opposite of that —— unbridled laughter and pleasant smiles.

Hailing from Karnataka, Nagesh was born Gundu Rao, a name that particularly seemed incongruent to his reedy figure. Perhaps the seeds of comedy and humour were sown right from the day he was named. It continued till a few months before he died.

His last released movie was Dasavatharam, in which he played the father to the tall Khalifullah character that Kamal Haasan played.

Dasavatharam, then again, is titularly appropriate to a career that has been all about avatars on screen. After stumbling on to films through the inevitable route of stage plays, Nagesh was quickly able to establish his credentials with his flair for organic comedy and spontaneous wit.

Though his initial inspiration was the Hollywood 'caperist' Jerry Lewis, Nagesh however grew out of his spiritual mentor by creating his own brand that had the eclectic mix of slapstick and stand-up. But his acting idiom was posited on strong grammar, and he could do adequate justice to any 'character' role.

He had worked with aplomb all the big directors, especially K Balachander and Sridhar, the two who had an innate understanding of cinema humour, and knew that Nagesh could deliver that. Nagesh was also an intrinsic part of most MGR and Sivaji Ganesan movies.

Kamal Haasan was another discerning 'humourphile' who understood Nagesh's value and talent. And it was natural Kamal was one of the earliest who arrived to pay his homage today.

Rajnikanth, another who respected Nagesh, was also at hand. Chief Minister M Karunanidhi, who himself is undergoing treatment at a hospital, shot off a condolence message.

During his active career, Nagesh was capable of inducing laughter from even the stoniest of objects. Tonight, even a stone would be teary-eyed.
*******************************
Humour was in his character

With the passing away of Nagesh, the stellar comedian, a golden era in the history of Tamil cinema comes to a close.The comedian who had the rare distinction of being a legend in his life-time breathed his last in Chennai today after a prolonged illenss.

Born as Gunddu Rao to Kannada speaking Brahmin Madhwa parents Nagesh was drawn to films even at a young age. He left his home with a firm determination that he would return only after establishing himself in some career.

His coming to Chennai, lodging in a 'single room' in West Mambalam with lyricist Vaali and veteran actor Srikanth and finding a small time job in the Railways that far from satisfied him marked the modest beginning of a star that shone with dazzling brilliance on the cine-sky for years to come.

It was when Nagesh started playing small roles in various drama troupes to keep himself busy that producer Balaji spotted him and gave him his first break in films.

Thereafter as they say there was no looking back for Nagesh whose performance after performance as the comic stole and ruled the hearts of the cine audience so much so that comedy became synonymous with the name Nagesh. Nagesh has acted in many films with Sivaji Ganesan and MGR.

His roles in Thiruvilaiyadal, Kathalika Neramillai, Thillana Mohanambal, Server Sundaram, Pattanithal Bootham, Neerkumizhi, Edhirneechal, Aboorva Raagangal, Anbe Vaa to name a few have become part of legend.

The roles which he essayed with elan and a keen sense of timing are references for aspiring and established actors. He was also a talented dancer.

Directors like Sridhar and Balachander used his potential to the full giving him roles equal to that of the leading stars of the day. His role as villainous comic pimp in Thillana Mohannambal brought to light another facet of this great actor which was put to use in Kamal Haasan's Aboorva Sahodharargal.

Incidentally his professional connection with Kamal Hassan is of great relevance. He went on to play memorable roles in Michael Madana Kama Rajan, Magalir Mattum and Nammavar with Kamal.

Kamal Hassan often said that he felt envious of Nagesh's immense talent especially wwhen he worked with Balachander. At times when Kamal found it difficult to bring out the right emotions for the camera, KB apparently used to chide him saying 'had this scene been given to Nagesh, he would have done this in the first take itself.'

Balachander once recalled how Nagesh prophesied his success while driving down Radhakrishnan salai. When KB asked him why he was driving so fast, Nagesh told him not to get scared. ' I know I am responsibile for the life and safety of one of the India's great directors.'

That was long before Balachander entered the film industry.
In the twilight of his career, Nagesh took up character roles which he essayed with equal aplomb.

For all his acting prowess, Nagesh never got his due recognition. The National awards eluded him till the end. That is perhaps the tragedy of a great performer who regaled the hearts of his audience with his art.

The Tamil film industry condoled Nagesh's death. Popular comedian Vivek, expressed shock and said, 'he was an inspiration for all comedians. He set an example for us venturing to play lead roles.'

'Skilled at both slapstick and stand-up comedy, his sheer presence on screen evoked humour,' Vivek said.

Veteran artiste Manorama, who shared the screen with Nagesh in over 100 films, said, 'I am shocked and speechless. In his death I have lost a good friend of mine. I am yet to recover from the demise of Nambiar. Now Nagesh's death has come as a double blow.'

'His subtle variations and body language are unforgettable. He was a friend and a guide to me. Also, he had been behind me during troubled times. Memories of sharing the screen with 'Sivaji' Ganesan and Nagesh still linger.'

Condoling the death of Nagesh, Nadigar Sangam president R Sarath Kumar said, 'The film industry has lost its leading light. A source of courage and inspiration for younger generation, I recall with tears my long-standing association with him.'

'I express my regret to several thousand fans of the actor across the globe and pray that his soul rests in peace'. Noted film director Vikraman, who worked with Nagesh in Poovae Unakkaga said, 'he was a thorough professional.

He co-operated us well in Poovae Unakkaga. He was simple and down-to-earth despite his achievements. A man who constantly improvised on the sets, Nagesh would be sorely missed'.

Merit list

Panchathanthiram (2002)
Michael Madana
Kamarajan (1991)
Apoorva Sahodarargal
(1989)
Thillu Mullu (1981) - Nagesh
Ethir Neechal (1968) -
Maadhu
Thillana Mohanambal (1968)
Anubavi Raja Anubavi
(1967)
Bama Vijayam (1967)
Anbe Vaa (1966)
Major Chandrakant (1966)
Thiruvilayadal (1965) -
Tharumi
Kadalikka Neramillai (1964)
Server Sundaram (1964)
Galaattaa Kalyaanam
Ooty Vari Uravu
Neerkkumizhi


Courtesy: http://newstodaynet.com

Tuesday, June 24, 2008

443. இது தான்டா இந்தியத்தாத்தா !

இது நடந்தது ஜூன் 2002-இல்!

அமெரிக்க அதிபர் புஷ் ISI நிறுவனத்தில் பணி புரிந்த ஒருவருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதை வழங்கி கௌரவித்தார் என்று கேள்விப்பட்டால், நாம் கொதித்துப் போக வேண்டியதில்லை ! நான் இங்கு குறிப்பிடும் ISI, பாகிஸ்தானின் Inter Services Intelligence என்கிற உளவுத்துறை நிறுவனம் அல்ல, நம் நாட்டின் பாரம்பரியமிக்க, கொல்கத்தாவிலுள்ள Indian Statistical Institute என்கிற அரசு நிறுவனம் :)

கௌரவிக்கப்பட்டவர் கலியம்புடி ராவ் என்கிற இந்திய புள்ளிவிவரயியல் (Statistics) மேதை! அவரது பெயரால் வழங்கப்படும் பல கோட்பாடுகளை (Rao Distance, Rao's Score Test, Cramer-Rao Inequality, Rao-Blackwellization, and Fisher-Rao Theorem) கண்டுபிடித்து, புள்ளிவிவரயியல் துறைக்கே பெருமை சேர்த்த வித்தகர் இவர்!

புஷ் வழங்கிய, ஜனாதிபதியின் அறிவியலுக்கான தேசியப் பதக்கத்தை இவருக்கு முன்னால் வாங்கியுள்ள, இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நால்வர் - இயற்பியலுக்கு நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர், மரபியல் மேதை ஹர்கோபிந்த் குரானா, பெல் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் குமார் படேல் மற்றும் அருண் நேத்ரவல்லி ஆகியோர். மேற்கூறிய நால்வரும் தங்களது இளவயதிலேயே அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தவர்கள். ஆனால், கலியம்புடி ராவ் ISI இயக்குனர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தனது 60-வது வயதில் அமெரிக்காவுக்குச் சென்றார், அவரது மகனும் மகளும் அமெரிக்காவில் இருந்த காரணத்தால். பொதுவாக, இந்த வயதில் இந்திய தாத்தா/பாட்டிகள் அமெரிக்காவில் வளரும் தங்களது பேரக் குழந்தைகளுடன் விளையாடுவதற்கு வேண்டி அங்கு செல்வது வழக்கம் :)

ஆனால், நமது சூப்பர் தாத்தாவோ, தனது 62-வது வயதில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்து, 70வது வயதில், பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தில் புள்ளி விவரயியல் துறைத்தலைவராக உயர்ந்து, 75வது வயதில் அமெரிக்க குடிமகனா(ரா)கி, தனது 82வது வயதில், அமெரிக்கா ஜனாதிபதியின் அறிவியல் பதக்கத்தை வென்று பெருமை பெற்றவர்.

ராவ், "பணி ஓய்வு பெற்றபின் இந்தியாவில் நம்மை யாரும் மதிப்பதில்லை. உடன் பணி புரிபவர் கூட உங்கள் பதவிக்கு மரியாதை தருகிறார்களே அன்றி உங்கள் உழைப்பையும், மேதமையையும் மதிப்பதில்லை" என்று கூறுவதை வைத்து அவரது இந்திய அனுபவம் கசப்பானது என்று சொல்லி விட இயலாது. ஏனெனில், இவர் இந்திய அரசின் பத்மவிபூஷன் விருதை பெற்றவரும் கூட!

அவர் பணி புரியும் பென்ஸில்வேனியா பல்கலைக்கழகக் குறிப்பொன்று "நவீன புள்ளிவிவரயியலின் ஒரு முக்கிய முன்னோடியாகவும்,உலகின் தலை சிறந்த 5 புள்ளிவிவரயியலாளர்களில் ஒருவராகவும் ராவ் உலக அரங்கில் அறியப்பட்டுள்ளார்" என்று புகழாரம் சூட்டுகிறது. அவரது ஆராய்ச்சி, பொருளாதாரம், வானிலை, மருத்துவம், ஏரோனாடிக்ஸ் என்று பல துறைகளின் மேம்பாட்டுக்கு உதவியிருக்கிறது.

ராவ் இவ்விருதை புள்ளிவிவரயியலில் இந்தியாவின் சிறப்பு மிக்க பாரம்பரியத்திற்கு கிடைத்த மரியாதையாகவே பார்க்கிறார். ராவ் குறிப்பிடும் பாரம்பரியத்தின் அடித்தளத்தை அமைத்தவர், P C மஹாலனோபிஸ், இவர் தான் ISI நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆவார். உலகின் புள்ளிவிவரயியலாளர்களில் பெரும்பான்மையினர் இந்தியர்கள் என்பது கூடுதல் விவரம்!

எ.அ.பாலா

Monday, April 07, 2008

431. அந்தோணி முத்துவின் வார்த்தைகள் - உள்ளத்திலிருந்து !

என் இனிய கர்ணர்களே,

உங்கள் அன்பினாலும் தயவினாலும் எனக்கு மடிக்கணினி கிடைத்திருக்கிறது.
மனமெல்லாம் சந்தோஷத்தினால் பூத்துக் குலுங்குகிறது.
என் பழைய மேசைக் கணினிக்கும் இதற்கும் மலையளவு வித்தியாசம்.
அது Celeron 800 mhz processor, 128 mb RAM. சமயங்களில் ஆமை கூடத் தோற்று விடும்.

இது Core-2 Duo 1.83 Ghz processor, 2 Mb RAM, DVD Writer, Webcam, மற்றும் நிறைய வசதிகளைக் கொண்டது. அது ஆமை வேகம் என்றால் இது புலிப்பாய்ச்சல்.

அந்த டிசம்பர் மாதக் குளிரில் நடுங்கியபடி, கடவுளுக்கு நான் எழுதிய அந்தக் கடிதத்திற்கு எனக்கு இவ்வளவு அழகான பதில் கிடைக்குமென நான் எதிர்பார்க்கவில்லை.

கடவுள் நேரிடையாக செயலாற்றுவதில்லை.

தாம் தேர்ந்தெடுத்த சில நல்ல மனிதர்களின் மூலமாகவே அவர் செயல்படுகிறார் என்று எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது.

அவரது செயல்களைச் செய்பவர்கள் அவராகவே மாறிவிடுகிறார்கள்.

இதை வெறுமனே ஒரு எலக்ட்ரானிக் பொருளாக என்னால் பார்க்க முடியவில்லை.

என் துன்பத்தைத் தங்களின் துன்பமாக உணர்ந்து….
நான் நலமாய் இருக்க வேண்டும் என மனதார விரும்பி….
பிரார்த்தனையோடு தங்களின் வியர்வைத்துளியையும் சேர்த்து….
மனம் நிறைந்த வாழ்த்துக்களோடு….
உருவாக்கப்பட்ட உயிருள்ள ஒரு ஜீவனாக இந்த மடிக்கணினியைப் பார்க்கிறேன்.

இத்தனைக்கும் இதற்காக உதவியவர்கள் எவரும் ஏதோ மாபெரும் கோடீஸ்வரர்களோ
வசதிகளில் புரள்பவர்களோ அல்ல.

அத்தனை பேருமே என் போன்ற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

அதனால்தானோ என்னவோ என் வலியையும் வேதனையையும் அவர்களால் முழுமையாக உணர முடிந்திருக்கிறதென நம்புகிறேன்.

நான் இதைத் திறந்து வேலை செய்யும்போதெல்லாம்,
இதற்கு உதவின, உதவ நினைத்த் அத்தனை அன்பு ஆத்மாக்களும்…
மனதளவில் என்னுடன் இருப்பதாக உணர்கிறேன்.

நான் தனியன் இல்லை எனக்காகவும் கவலைப்பட இத்தனை ஜீவன்கள் இருக்கிறார்கள் என்கிற உணர்வே ஆயிரம் யானைகளின் பலத்தைக் கொடுக்கிறது.

அனைவருக்கும் என்னுடைய கண்ணீர் கலந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

எல்லாம் வல்ல இறை சக்தி அனைவருக்கும் நீண்ட ஆயுளையும், விரும்பியதனைத்தையும் இடைவிடாது வழங்க மனமுருகிப் பிரார்த்திக்கிறேன்.

எவரஸ்ட்டின் உச்சிக்கு ஏறி இப்படி கத்த வேண்டும் போலத் தோன்றுகிறது.

நான் அதிர்ஷ்டக்காரன்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

Regards
Anthony Muthu.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails